சம்பளத்துக்கு பதிலா அதுக்கு அடி போடும் நயன்.. இனிமே கோடி கொட்டப் போகுது!...

நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றது. இந்த படத்தை என் ஜே சரவணன் இயக்கியிருந்தார். படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் .

இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். படத்தில் ஊர்வசி மயில்சாமி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு இசை கிரிஷ் இசையமைத்திருந்தார். படம் நல்ல ஒரு வெற்றியை பதிவு செய்து ரசிகர்கள் விரும்பும் திரைப்படமாக அமைந்தது .

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் என அப்போதே கூறியிருந்தார்கள். அந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதன் இரண்டாம் பாகத்தையும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தான் தயாரிக்கிறது. நயன்தாரா தான் படத்தில் நடிக்கிறார்.

முதலில் ஆர்.ஜே பாலாஜி இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்தப் படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி வசூலை குவித்தது.

தற்போது சுந்தர் சி வடிவேலுவை வைத்து கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு பிறகு மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாராவிற்கு சம்பளமே கிடையாதாம்.

அதற்கு பதிலாக வியாபாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பெற்றுக் கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க அவர்களுடன் இணைந்து சுந்தர் சி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ்சும் சேர்ந்து தான் தயாரிக்கிறது.

சுந்தர் சி ஃபர்ஸ்ட் காபி என்ற பல அடிப்படையில் படத்தை தயாரிக்கிறார். நயன்தாரா சம்பளம் வாங்காமல் அதற்கு பதிலாக அதன் வியாபாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பெற்றுக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it