சைந்தவி போட்ட கண்டிஷன்! இதுதான் ஜீவியுடனான விவாகரத்துக்கு காரணமா?

தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜி வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது பள்ளி பருவ காதலியான சைந்தவியை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். பத்தாண்டு கால காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு அழகான மகள் இருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் சினிமாவில் நடிக்க வந்த பிறகுதான் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக இருவருக்கும் ஆன பிரச்சனை இருந்து வந்தாலும் இவர்களுக்குள் ஒரு நல்லுறவு இல்லாமல் தான் இருந்தது. அதனால் இருவருமே மனப்பூர்வமாக பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து சட்டபூர்வமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

இவர்களுடைய விவாகரத்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை கருத்தில் கொண்டு பல யோசனைகளுக்குப் பிறகு 11 வருட திருமண உறவை முடித்துக் கொள்வதாக முடிவு எடுத்து இருக்கிறோம் என இருவருமே தனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இவர்களுடைய பிரிவுக்கு காரணமான ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சைந்தவி போட்ட ஒரு கண்டிஷன் தான் இவர்களுடைய பிரிவுக்கு காரணம் எனத் தெரிகிறது. அதாவது ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என சொன்னதும் சைந்தவி போட்ட முதல் கண்டிஷன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என்பதுதான்.

ஆனால் அதை ஜீவி பிரகாஷ் கேட்கவே இல்லையாம். அதுதான் இவர்களுடைய கருத்து வேறுபாடுக்கு காரணம் என இப்போது தெரிகிறது. விரைவில் இவர்களுடைய திருமண விவாகரத்து அறிவிக்கப்படும் .ஜிவி பிரகாஷ் ஒரு நடிகராக இசையமைப்பாளராக பின்னணி பாடகராக தயாரிப்பாளராக என பன்முக திறமை கொண்டவர்.

தற்போது இவர்கள் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. சைந்தவி ஒரு கர்நாடக இசை பாடகி ஆகவும் பின்னணி பாடகியாகவும் சினிமாவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it