விஜய் 69ஐ கடைசி படமாக அறிவிக்க இதுதான் காரணமா... பிளான் பக்காவா இருக்கே..!

தளபதி விஜய் தனது கடைசி படம் என 69வது படத்தை உறுதியிட்டு சொல்லிவிட்டார். அந்தப் படத்திற்குப் பிறகு முழுமூச்சாக அரசியலில் இறங்கப் போகிறார். அதனால் நடிப்புக்கு முழுக்கு என்றும் தெரிகிறது. ஆனாலும் கோட் படத்திற்கே விஜயை ரசிகர்கள் எல்லாரும் அப்படி ரசிச்சாங்க. படமும் மாஸ் ஹிட்டானது. 69வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் அரசியல் இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

விஜய் அரசியல் மேடைகளில் எப்படிப் பேசுவார்? அவருக்கும் அரசியல் அந்தளவுக்கு ஒத்துவராது. மீண்டும் சினிமாவுக்குத் திரும்பி விடுவார்னும் சொல்றாங்க. இன்னும் சிலர் 200 கோடி சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்கும்போது ஏன் திடீர்னு அரசியல் போறாரு. அங்கும், இங்கும் கால் வைத்துக் கொள்ளலாமேன்னும் ஆலோசனையைக் கொடுக்கின்றனர். ஆனால் இங்கு ஒரு பிரபலம் விஜய் நிச்சயம் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என உறுதியாகச் சொல்கிறார். வேறு என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.


விஜய் தொடர்ந்து நடிச்சாருன்னா அதாவது கடைசி படம்னு சொன்னபிறகு ஒரு வருட கேப் விட்டு அவர் மீண்டும் படம் நடிச்சாருன்னா அவருக்கு 500 கோடி சம்பளம் கொடுக்கக்கூட தயாரா இருக்காங்க. ஏன்னா விஜய் ஒரு வருஷம் கேப்புக்கு அப்புறம் வர்றாரு. அதனால மக்கள் மத்தியில பெரிய வரவேற்பு கிடைக்கும்கறதுக்காக அப்படி கொடுக்கறதுக்குத் தயாரா இருக்காங்க. அதனால விஜய் என்கிற அந்த நடிகனுக்கான பாசமும், வரவேற்பும் நிச்சயமா குறையாது. அது மக்கள் மத்தியிலும் சரி. திரையுலகத்திலும் சரி.

விஜய் அரசியலுக்கு வர நினைக்கும்போதே அவர் அரசியலைப் பேசியிருக்கலாம். முழுநேர அரசியல்வாதியாக அதாவது மாநாட்டுக்குப் பிறகு தீவிர அரசியல்வாதியாக வரலாம்னு முடிவுக்கு வந்துருக்கார். அதுவரை சந்தோஷம் தான். கடைசி படத்துக்கு நிறைய நாள் கொடுத்துருக்காரு. அந்த இடைவெளிகளைத் தன்னோட அரசியலுக்குப் பயன்படுத்தப் போறாரு.

ஒரு வருடம் டைம் கொடுத்துருக்காரு. இடையில் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம் செல்வார். இந்தப் படத்துக்கு 2025 அக்டோபர் வரை கொண்டு போறதுக்குக் காரணம் அதில் அரசியலும் இருக்கு. என்னைப் பொருத்தவரை விஜய் தொடர்;ந்து சினிமாவில் நடிப்பார். ஏன்னா அவர் நினைத்த வெற்றி 2026ல் கிடைக்காது என்பது என்னோட அனுமானம். அவர் ஏன் கடைசி படம்னு சொன்னாருன்னா நமக்கு நிச்சயமா பெரும்பான்மை கிடைக்கும். அப்படி கிடைச்சா முதல்வராகி விடுவோம். அப்புறம் சினிமாவில் நடிக்க முடியாது என்பதால் தான்.மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it