More
Categories: Cinema News latest news

திரிஷா, தனுஷ் பற்றி மேடையில் கூல் சுரேஷ் என்ன சொன்னார் தெரியுமா?.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்பீச்!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பின்னர் கூல் சுரேஷ் மீண்டும் தியேட்டர் வாசலில் வந்து நின்று பேசுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் பேசும் அளவுக்கு இதுவரை எந்த பெரிய படங்களும் வரவில்லை. மேலும், பல படங்களில் கமிட் ஆகி வரும் அவருக்கு இனிமேல் அந்த நிலைமையும் இருக்காது என்றே கூறுகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் ஒன்று நடத்திய பிரம்மாண்ட விழாவில் பேசிய கூல் சுரேஷிடம் பின்னாடி திரிஷா புகைப்படத்தை முதலில் காட்டினர். திரிஷா போட்டோ வந்தததும் வெட்கப்பட்டு கண்களை மூடிக்கொண்டு வர்ணித்து பேச ஆரம்பித்தார் கூல் சுரேஷ்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கேப்டனை மறக்காத கேப்டன் மில்லர்!.. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!..

என் தலைவன் சிம்புவோட 2 படம் நடிச்சிருக்காங்க, அலை மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா என பேசிய கூல் சுரேஷ் திரிஷா ஒரு நல்ல நடிகை என்று பாராட்டினார்.

அதன் பின்னர் நடிகர் தனுஷ் போட்டோ வந்த நிலையில், சற்று நேரம் சிரித்த கூல் சுரேஷ் எல்லோரும் தனுஷுக்கும் சிம்புவுக்கும் இடையே சண்டை என பேசிக்கிறாங்க.. ஆனால், எனக்குத் தான் தெரியும் அவங்க எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று.. தனுஷ் மற்றும் சிம்புவை போலத்தான் அவர்கள் ரசிகர்களும் சிம்பு படம் பார்க்க தியேட்டருக்குப் போன போது நாங்க தனுஷ் ரசிகர்கள் எங்களுக்கு கூல் சுரேஷை பிடிக்கும். கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புகள் கொடுங்க என சொன்னார்கள் என தனுஷ் போட்டோ வந்ததும் மேடையிலேயே செம உஷாராக கோல் போட்டு வாய்ப்பையும் கேட்டு விட்டார் கூல் சுரேஷ். வாய் உள்ள பிள்ளை புளைக்கும் என்பதை கூல் சுரேஷை பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!.. 2ம் திருமணம் முடிந்த கையோடு அம்மாவான அமலா பால்!..

 

Published by
Saranya M