சூர்யா43 இந்த பிரச்னையை தான் சொல்ல போகுதா.. அப்போ தமிழ் ரசிகர்கள் கொண்டாடிடுவாங்களே..!

Published on: December 12, 2023
---Advertisement---

சூர்யா43: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் நடித்து ஹிட் கொடுக்கும் தற்போதைய நடிகர் என்றால் அது சூர்யா தான். அப்படி அவர் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் 43வது படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சூர்யா சூரரைப்போற்று, ஜெய் பீம் என வெற்றி படங்களை கொடுத்து அசரடித்தார். அதனை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் கடைசி சில நிமிட சீன்களுக்கு வந்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தினை பதியவிட்டு சென்றார். இந்த வருடம் அவர் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

இதையும் படிங்க: ஜேசுதாஸ் பாதி.. எஸ்.பி.பி.. பாதி… கலந்து செய்த கவிதை.. யார் அந்தக் காந்தக் குரல் பாடகர்?..

தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வரலாற்று கதையாக உருவாகும் இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவக்கப்பட்டு வருகிறது. சிவா இப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்து சுதா கொங்கரா படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புறநானூறு என்ற பாதி டைட்டில் மட்டும் இந்த படத்துக்கு வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பை ஜிவி பிரகாஷ் செய்ய இருக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா, விஜய் வர்மா, பிரகாஷ் ராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

இதையும் படிங்க: இளையராஜா எச்சரித்தும் அவர் பேச்சை மீறிய எஸ்.பி.பி! அதனால் வந்த பின்விளைவு என்ன தெரியுமா?

இப்படத்தின் கதை குறித்த ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. சூரரைப்போற்று போல இதுவும் உண்மை கதை தானாம். கதை 1950 முதல் 1965 காலக்கட்டத்தில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக அந்த காலத்தில் இருந்த சென்னையை செட்டாக போட்டு வருகின்றனர். அதில் முக்கியமாக அண்ணா சாலை, தலைமையகம் லைக்ஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் இந்தி எதிர்ப்பு முக்கியமாக பேசப்படும். மேலும் சூர்யாவின் நடிப்பு பெரிய ஹைலைட்டாகவும், படிப்பின் முக்கியத்துவத்தையும் படம் பேச இருப்பதும் முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.