Connect with us
ilai

Cinema News

இளையராஜா எச்சரித்தும் அவர் பேச்சை மீறிய எஸ்.பி.பி! அதனால் வந்த பின்விளைவு என்ன தெரியுமா?

Ilaiyaraja and SPB: தமிழ் திரையுலகில் இசைத்துறையில் யாராலும் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக இருந்தவர்கள் இளையராஜாவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும். எஸ்.பி.பி குரலில் அமைந்த பாடலை இளையராஜாவின் இசையில் நாம்  கேட்காமல் கடக்க முடியாது.

அந்தளவுக்கு இருவரும் இசைத்துறைக்காக ஆற்றிய பணிகள் ஏராளம். 80களில் இருவரும் நகமும் சதையுமாகத்தான் வலம் வந்தார்கள். ஆனால் திடீரென இளையராஜா எஸ்.பி,பிக்கு எதிராக தடை ஒன்றை போட்டார்.

இதையும் படிங்க: அசோகன் கடனாளியா மாறியதற்கு எம்ஜிஆர்தான் காரணமா? இப்படியெல்லாம் நடந்திருக்கா?

இனி எந்த மேடையிலும் தன்னுடைய அனுமதி இல்லாமல் எஸ்.பி.பி தன் இசையில் அமைந்த பாடலை அவர் பாடக் கூடாது என்று தடை ஒன்றை பிறப்பித்தார். அதிலிருந்தே அவர்களுக்குள் நெருப்புப் புகை புகைய ஆரம்பித்தது.

அது கடைசி வரை இருந்து கொண்டேதான் இருந்தன. இந்த நிலையில் இளையராஜா முதன் முதலில் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் இந்த சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தார்.

இதையும் படிங்க: அந்த குழந்தையே நீங்கதான் சார்!.. ஜிதர்தண்டா-வுக்கும் ‘டபுள் எக்ஸ்’சுக்கும் இப்படி ஒரு தொடர்பா?..

இசையமைத்த முதல் படத்திலேயே எஸ்.பி.பியை பாட ஆசைப்பட்டார் இளையராஜா. அதனால் முதல் நாளே எஸ்.பி.பியிடம் இளையராஜா நாளை ரிக்கார்டிங் இருக்கிறது என்றும் எதும் கூல் டிரிங்ஸ் குடித்து விடாதே என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

ஆனால் எஸ்.பி.பி இளையராஜா சொல்லியும் அன்று கூல் டிரிங்ஸை குடித்து மறு நாள் அவரால் குரலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொண்டை கரகரவென இருந்திருக்கிறது. இதை மறு நாள் இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறார் எஸ்.பி.பி.

இதையும் படிங்க: இப்படி ஜொள்ளுவிட வச்சிட்டியே!.. செதுக்கி வச்ச அழகில் அசத்தும் மாளவிகா மோகனன்!..

உடனே எஸ்.பி.பி பாட இருந்த அந்த பாடல் வாய்ப்பை மலேசியா வாசுதேவனிடம் கொடுத்தாராம் இளையராஜா. இல்லையென்றால் முதல் படத்திலேயே எஸ்.பி.பி பாடியிருப்பார். அதன் பிறகு முதன் முதலில் இளையராஜாவும் எஸ்.பி.பியும் இணைந்த முதல் படம் பாலூட்டி வளர்த்த கிளி என்ற திரைப்படம்.இந்த படம் இளையராஜாவுக்கு இரண்டாவதாக அமைந்த படமும் கூட.

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top