More
Categories: Cinema News latest news

தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்த வந்த இளையராஜா.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Ilaiyaraja DSP: தமிழ் சினிமாவில் துள்ளலோடு இசையுடன் ரசிகர்களை பரவசப்படுத்துபவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத். புஷ்பா படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

அதிலும் குறிப்பாக ஊ சொல்றீயா பாடல் இந்தியா முழுவதும் ஒலித்த பாடலாக மாறியது. ஒரு ஐகானிக் இசையமைப்பாளராகவே தேவி ஸ்ரீ பிரசாத் பார்க்கப்படுகிறார். அவரிடம் எப்போதுமே ஒரு எனர்ஜி காணப்படும். அவர் பாடும் போது கேட்பவர்களையும் ஆட வைக்கும். அதுமட்டுமில்லாமல் பாடும் போது எப்போதும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆடிக் கொண்டேதான் பாடுவார்.

இதையும் படிங்க: முத்துவுக்கு ஆப்படித்த சிட்டி ஆட்கள்… மினிஸ்டரிடம் மாட்டுக்கொள்ள போவது யார்?

அதுவே ரசிகர்களை அவர் பக்கம் இழுப்பதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் கையாளும் யுத்தியாக கூட இருக்கலாம். இந்த நிலையில் நேற்று தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் இளையராஜா சம்பந்தப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. தேவி ஸ்ரீ பிரசாத் புதியதாக ஒரு ஸ்டூடியோவை கட்டியிருக்கிறாராம். அதனால் வாழ்த்த வந்திருக்கிறார் இளையராஜா என்று செய்திகள் வெளியானது.

ஆனால் உண்மையிலேயே தேவி ஸ்ரீ பிரசாத்தின் நீண்ட நாள் கனவாக ஒன்று இருந்ததாம். சொந்தமாக ஒரு ஸ்டூடியோவை கட்டி அதில் இளையராஜா உருவம் பொதித்த பெரிய புகைப்படத்தையும் அந்த ஸ்டூடியோவில் வைத்து அந்த புகைப்படத்தின் அருகில் இளையராஜாவுடன் நின்று தேவி ஸ்ரீ பிரசாத் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: குணா படத்தை பார்த்துவிட்டு இயக்குனரிடம் ரஜினி கேட்ட கேள்வி!.. மனுஷனுக்கு இவ்வளவு ஆசையா!..

இதுதான் அவருடைய பல ஆண்டு கனவாம். அது இப்போது நனவாகிவிட்டதால் இளையராஜாவை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

Published by
Rohini

Recent Posts