Connect with us

Cinema News

மச்சினியிடம் கதையை திருடினாரா தனுஷ்.. நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்..!

Soundarya Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகளுமே இயக்குனர்களாக இருப்பது அனைவரும் அறிந்த சேதி தான். இதில் செளந்தர்யா இயக்க இருந்த ஒரு படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது மகள். இவர் அனிமேஷன் துறையில் படிப்பை முடித்தவர். தன் தந்தையை வைத்து கோச்சடையான் என்னும் அனிமேஷன் படத்தினை உருவாக்கி இருந்தார். இப்படத்தின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்தை அழிக்க திட்டமிட்ட ஒரே நடிகர்! கேப்டனின் செல்வாக்கு தெரியாமல் சரண்டர் ஆனதுதான் மிச்சம்

இப்படத்தினை தொடர்ந்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்த படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தனுஷ் மற்றும் காஜல் அகர்வாலை வைத்து இயக்க இப்படத்தின் கதையை ரெடி செய்து இருந்தாலும் படக்குழு தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு விடுத்து இருக்கிறார் செளந்தர்யா. ஆனால் சரியான நடிகர்கள் யாரும் கிடைக்கவில்லையாம்.

இதனை அடுத்து தனுஷுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. கொடி படப்பிடிப்பில் இருந்த தனுஷ், ஸ்கிரிப்ட்டை முடித்து செளந்தர்யாவுக்கு அனுப்பி இருக்கிறார். மிகச்சரியான இரண்டாம் பாகமாக அந்த கதை இருந்ததாம்.

இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் விரைந்த போலீஸார்! அந்த நடிகர் கொடுத்த புகார் – அதிரிபுதிரியாக நடந்த போண்டாமணி திருமணம்

இதையடுத்து, செளந்தர்யா தாணுவிடம் இப்படம் குறித்து பேசினாராம். அவரும் தயாரிக்க சம்மதிக்க, அதை தொடர்ந்தே விஐபி2 முடிவாகி படமும் ரிலீஸ் ஆனதாம். வேல்ராஜ் இயக்கத்தில் உருவான முதல் பாகம் அளவுக்கு செளந்தர்யா இயக்கத்தில் உருவான இரண்டாம் பாகம் ஹிட்டடிக்கவில்லை.

மச்சினியின் தலைப்பை தான் தனுஷ் தற்போது இயக்கும் மூன்றாவது படத்துக்கு வைத்து இருக்கிறார். இப்படத்தில் அனிகா, மேத்யூ ஆகியோர் நடிக்க இருப்பது குறித்த பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top