நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?.. பேன் இண்டியா படத்தில் நடிகர் தனுஷ்…..

Published on: April 9, 2022
---Advertisement---

எடுத்தது இரண்டு படங்கள் அந்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகும் முன்பே தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் திரைப்படம். அதுவும் பக்கா ஆக்சன் திரைப்படம். மேலும் 1930களில் நடக்கும் கதைக்களமாம். இந்த பெருமைக்கெல்லாம் சொந்தக்காரர் தான் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

தற்போது இந்த படம் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை அப்படத்தின் கதை விவாதத்தில் இருக்கும் நபர் ஒருவர் பகிர்ந்து கொண்டார். இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கி வருகின்றனறாராம். இப்படம் 1930 காலகட்டத்தில் ஒரு கேங்ஸ்டர் பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் கதை விவாத பணியில், ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், மிஷன் மங்கல் படத்தில் பணியாற்றிய ஜெகன் சக்தி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த படத்தில் தமிழை தவிர மற்ற மொழிகளில் முக்கிய நடிகர்களும் நடிக்க உள்ளனராம்.

இதையும் படியுங்களேன் – மண்ணெண்ணெயை குடித்த தனுஷின் மெகா ஹிட் இயக்குனர்.! பகீர் பின்னணி….

 இந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என தற்காலிக தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே, அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி, சாணி காயிதம் ஆகிய திரைப்படங்கள் இன்னும் OTT பக்கம் வராமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment