மண்ணெண்ணெயை குடித்த தனுஷின் மெகா ஹிட் இயக்குனர்.! பகீர் பின்னணி....

தானுஷ் நடித்து கடந்த ஆண்டு இதே தேதில் தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா ஹிட் திரைப்படமாக மாறிய திரைப்படம் கர்ணன். தனுஷ் நாயகனாக நடித்த இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் சிறப்பாக இயக்கி இருந்தார்.

சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆனதை பலரும் இணையத்தில் வாழ்த்தி வருகின்றனர். இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவர்க்கும் நன்றி தெரிவித்து இருந்தார்.

இந்த திரைப்படம் படமாக்கப்பட்டபோது, ஏற்பட்ட சில அனுபவங்களை அப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்த நடிகர் நடராஜ் தெரிவித்து இருந்தார். அப்போது அவர் கூறுகையில், இப்படம் ஆரம்பித்த உடன் கொரோனா தாக்கம் ஏற்பட்டு விட்டது. உடனே, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தயாரிப்பாளர் இயக்குனர்கள்,டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்கள் மீது அவ்வளவு கவனமாக இருந்தனர். எப்போதும் டாக்டர் குழு எங்களை கண்காணித்து கொண்டே இருக்கும்

இதையும் படியுங்களேன் - விஜய் படத்த சுட்டு அதுல அவரையே நடிக்க வச்சிட்டியே நெல்சா!…இதுதான் நடந்துச்சா?.!

இயக்குனர் மாரி செல்வராஜ் இதில் மிக தீவிரமாக வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது ஷூட்டிங்கில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் போது, தண்ணீர் பாட்டில் இருந்தது அதனை எடுத்து தாகமாக இருகிறது என்று குடித்து விட்டார்.

நாங்கள் பதறிவிட்டோம். உடனே அவர் வாந்தி எடுத்து அதனை சரி செய்து விட்டார். அவ்வளவு கடுமையாக அவர் உழைத்தார் என நடிகரும் ஒளிப்பதிவாளருமான நாட்ராஜ் குறிப்பிட்டார்.

 

Related Articles

Next Story