அமீர் அவ்வளவு சொல்லியும் கேட்காத சரவணன்!.. வீணா வாழ்க்கையை கெடுத்துக்கிட்டாரே!..

Actor saravanan: 90களில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சரவணன். வைதேகி வந்தாச்சி என்கிற படம் மூலம் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் நடித்த பொண்டாட்டி ராஜியம் திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. அபிராமி, மாமியார் வீடு, சூரியன் சந்திரன், நல்லதே நடக்கும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இவருக்கென ஒரு மார்க்கெட் உருவானது. ரசிகர்களும் உருவானார்கள். பார்ப்பதற்கு ஒரு குட்டி விஜயகாந்த் போல இருந்தது இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக இருந்தது. விஸ்வநாத் மற்றும் சந்தோஷம் ஆகிய படங்களை தயாரித்து நடித்தார். சில படங்கள் தோல்வி அடைந்ததால் இவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. அதோடு, உடல் எடை கூடி அங்கிள் போல மாறினார். சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: பல மணி நேரம் காத்திருப்புக்கு பின்னாடி கனகாவை சந்தித்த குட்டிபத்மினி! நடிகை சொன்ன பகீர் தகவல்

அப்போதுதான் இவரை பாலா அவர் இயக்கிய நந்தா படத்தில் நடிக்க வைத்தார். அப்போதுதான் அவருக்கு அமீர் பழக்கமானார். எனவே, அமீரின் அலுவலகத்திற்கு சென்று தொடர்ந்து வாய்ப்பு கேட்டுள்ளார். அமீரின் இயக்கத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து பருத்திவீரன் உருவானபோது அவருக்கு ஒரு நல்ல வேடத்தை அமீர் கொடுத்தார்.

இந்த படத்திற்கு பின் ‘சித்தப்பு சித்தப்பு’ என எல்லோரும் அவரை அழைத்தனர். அதன்பின் இப்போது வரை தொடர்ந்து திரைப்படங்களில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அமீர் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் சரவணன் பற்றி பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அந்த படம் ஓடாதுன்னு அப்பவே தெரியும்!. தனுஷிடமே நக்கலடித்த இயக்குனர் அமீர்!…

பருத்தி வீரன் படம் ஹிட்டுக்கு பின் தொடர்ந்து இது போன்ற வேடங்களில் நடியுங்கள். வில்லனாக பிரகாஷ்ராஜ் மட்டுமே இருக்கிறார். நீங்கள் நல்ல வேடங்களை தேர்ந்தெடுத்து குணச்சித்திரம் மற்றும் வில்லனாக நடியுங்கள்’ என சொன்னேன். அவர் கேட்கவில்லை. உடனே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படம் தோல்வி.

இப்போது பேட்டி ஒன்றில் பருத்திவீரனால் எனக்கு எந்த லாபமும் இல்லை என பேட்டி கொடுக்கிறார். தங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். பருத்திவீரன் படம் மூலம் அவருக்கு கிடைத்த புகழை அவர் தக்கவைத்து கொள்ளவில்லை. அது அவரின் தவறு’ என அமீர் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: போர இடமெல்லாம் கன்னிவெடி! விக்ரம் படத்திலயும் படாத பாடு பட்ட அமீர் – 10 லட்சம் கொடுத்தும் புண்ணியமில்ல

 

Related Articles

Next Story