திருமணமானவர்னு தெரிஞ்சும் அவர் கூட போனதுதான் நான் செஞ்ச தப்பு! நடிகையின் வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா?

Director Mahendran: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்த இயக்குனர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் வெறும் 12 படங்களை மட்டுமே இயக்கி அந்தப் படங்களின் வாயிலாக ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இடம் பெற்றவர் இயக்குனர் மகேந்திரன்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்களை இயக்கி ஒரு மாபெரும் சாதனை படைத்த இயக்குனராக மாறியவர் மகேந்திரன். 26 படங்களுக்குக் கதையும், 27 படங்களுக்கு வசனமும், 14 படங்களுக்குத் திரைக்கதையும் அமைத்துள்ளாா்.

இதையும் படிங்க: ரச்சிதா என்னை மாமியாராவே பார்க்கலை… இப்பக்கூட இது நடந்துச்சு… தினேஷின் பெற்றோர் சொன்ன சம்பவம்!

இவர் எடுத்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் 40 நாள்களுக்குள்ளாகவே முடிவடைந்திருக்கின்றன. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம். இந்த திரைப்படம் 30 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதை அமைக்கும் பொறுப்பை மகேந்திரனிடமே கொடுத்திருக்கிறார்.எனினும் அந்தப் படம் எடுக்கப்படாமலேயே போய்விட்டது. இத்தகைய பெருமைமிக்க மகேந்திரன் நீண்ட நாளுக்கு பிறகு விஜயின் தெறி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார்.

இந்த நிலையில் அவரது சொந்தவாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நடிகை பிரேமி கூறினார். பிரேமி கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்றவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர்.

இதையும் படிங்க: என்னை அசிங்கப்படுத்துனாங்க!.. அத படமா எடுப்பேன்!.. வெங்கட்பிரபு ஆசை நிறைவேறுமா?!..

இயக்குனர் மகேந்திரனை பிரேமி நடிகர் செந்தாமரைதான் அறிமுகம் செய்து வைத்தாராம். அதிலிருந்தே இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது. ஆனால் ஏற்கனவே மகேந்திரன் திருமணமானவர். அது தெரிந்திருந்தும் பிரேமி மகேந்திரனை திருமணம் செய்து கொண்டு 7 வருடங்கள் தனியாக வாழ்ந்தாராம்.

இதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் பிரேமி கூறினார். அந்த 7 வருட கால வாழ்க்கையில் மகேந்திரனுக்கும் பிரேமிக்கும் வேலை இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டிருக்கின்றனர். அந்த நிலையில் தான் பிரேமியை விட்டுவிட்டு மகேந்திரன் முதல் மனைவியுடன் போய் சேர்ந்து விட்டாராம்.

இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வார பூகம்பம்..! உள்ளே வரும் வைல்ட் கார்ட்.. போட்டியாளர்களுக்கு செக்..!

அதன் பிறகு தன் அண்ணன், பெற்றோர்களின் அரவணைப்பில் பிரேமி தன் குழந்தையை வளர்ந்திருக்கிறார். இப்போது தன் மகனை ஒரு நல்ல இடத்தில் வேலைக்கு அமர்த்தி அழகும் பார்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல சீரியல்களில் பிரேமி குணச்சித்திர வேடங்களில் நடித்தும் வருகிறார்.

 

Related Articles

Next Story