Categories: latest news

சொல்றத மட்டும் செய்! வாய கொடுத்து மாட்டிக்கிட்ட அஜித்.. கோபத்தில் கத்திய இயக்குனர்

Actor Ajith: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் அஜித். ஒரு ஆக்சன் ஹீரோவாக தன்னுடைய வளர்ச்சியை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறார் அஜித். அவருக்கு இருக்கும் கிரேஸ் இங்கு கோலிவுட்டில் வேறு யாருக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உயரத்தில் இருக்கிறார் அஜித்.

ஆனால் அவருடைய ஆரம்ப கால படங்களை பார்த்தால் குடும்பப்பாங்கான படங்கள் மற்றும் ஒரு யதார்த்தமான கதைகளுடன் கூடிய படங்கள் இவற்றில் தான் நடித்திருப்பார். இதிலிருந்து அவருடைய வளர்ச்சியை நம்மால் பார்க்க முடிகிறது. அஜித்தும் சரி விஜய்யும் சரி ஆரம்ப காலங்களில் சென்டிமென்ட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த படங்களில் தான் நடித்து வந்தார்கள்.

ஆனால் இப்பொழுது ஒரு முழு ஆக்சன் ஹீரோக்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் அஜித் நடித்த ஒரு சென்டிமென்ட் கலந்த படம் அதுவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது நீ வருவாய் என . ராஜ்குமாரன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் முதலில் அஜித் விஜய் இருவரும் தான் நடிக்க இருந்தது.

இதையும் படிங்க:சனிக்கிழமை சரிவா?.. சக்சஸா?.. கல்கி 2898 ஏடி 3 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா பங்கு?..

பார்த்திபன் கேரக்டரில் விஜய்யும் இப்போது அஜித் நடித்த கேரக்டரில் அஜித்தும்தான் நடிக்க இருந்தது. ஆனால் அஜித்தின் கதாபாத்திரம் விஜய்க்கு மிகவும் பிடித்து போனதால் நான் அந்த கதாபாத்திரததில் நடிக்க விரும்புகிறேன். அஜித்தை ஹீரோவாக நடிக்க சொல்லுங்கள் எனக் கூறினாராம். ஆனால் அஜித்துக்கு இந்த ரோல் பிடித்துப் போனதால் அவர் முடியாது என்ன சொல்ல விஜய்யும் இந்த ரோல் எனக்கு வேண்டாம் என விலகி விட்டாராம் .

அதன் பிறகு தான் பார்த்திபன் உள்ளே வந்திருக்கிறார். 10 நாட்கள் கால்சீட் வீதத்தில்தான் அஜித் இந்த படத்தில் நடித்து கொடுத்தாராம். அதாவது ஒரு கெஸ்ட் ரோலில் தான் நடித்திருப்பார் அஜித். அந்த படப்பிடிப்பு சமயத்தில் ஒரு காட்சியில் தேவயானியும் அஜித்தும் பேசுவது மாதிரி படமாக்கி இருப்பார்கள். அதாவது இந்த மூக்குத்தி பிடிச்சிருக்கா? இந்த கம்பல் புடிச்சிருக்கா என தேவயானி கேட்க அதற்கு அஜித் பதில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

இதையும் படிங்க: ரஜினிலாம் பெரிய மேட்டரே இல்ல! வேட்டையனோடு மல்லுக்கு நிற்க தயாரான ‘கங்குவா’.. என்ன காரணம் தெரியுமா?

இந்த காட்சி எடுக்கும் போது ராஜகுமாரன் ஒன் மோர் ஒன் மோர் என கேட்டுக்கொண்டே இருந்தாராம். அதற்கு அஜீத் இந்த ஒரு காட்சியை எத்தனை முறை தான் எடுப்பீர்கள் என கேட்க அதற்கு ராஜகுமாரன் இங்கு நான் தான் இயக்குனர் நான் சொல்றத மட்டும் கேளுங்க என சொன்னாராம் .அந்த அளவுக்கு இயக்குனர் என்ற அடிப்படையில் சரியாக இருப்பாராம் ராஜகுமாரன் .

அது மட்டும் அல்லாமல் அடிப்படையில் ராஜகுமாரன் ஒரு ஹியூமரான நபரும் கூட. இதன் காரணமாகவே அஜித் பத்து நாள்  கால்சீட்டை 12 நாளாக மாற்றிக் கொண்டாராம். ஏனெனில் அந்த அளவுக்கு ராஜகுமாரனை அஜித்துக்கு பிடித்து போனதுதான் காரணம். இந்த சுவாரசிய தகவலை நடிகர் பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: கெடைச்ச வாய்ப்புல கோல் போட்டு அசத்திய வாலி… அண்ணாவிடம் இருந்து வந்த திருத்தம்..!

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

4 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

4 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

14 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago