சிவகார்த்திகேயனை வச்சு படம் பண்ணா பிஎம்டபுள்யூ காரா? போஸ்ட் போட்டு ஷாக் கொடுத்த இயக்குனர்

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் அஜித் விஜய் இவர்களுக்கு பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் ஒரு ஆங்கராக இருந்து மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கொடுத்து அழைத்து வந்தவர் தனுஷ்.

மூணு என்ற படத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமான சிவகார்த்திகேயனை நடிகராக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டவர் தனுஷ். சிவகார்த்திகேயனுக்கு பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டதாக செய்திகள் வெளியானது. அப்படி வந்த வாய்ப்புதான் மெரினா திரைப்படம். மெரினா திரைப்படத்தின் மூலம்தான் சிவகார்த்திகேயன் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: காபி குடிக்க அழைத்த ரசிகருக்கு விவேக் கொடுத்த சர்ப்பரைஸ்!.. மனுஷன் என்ன செஞ்சிருக்காரு பாருங்க!..

இப்படி பல படங்களில் ஹீரோவாக நடித்து அதுவும் ஆரம்பத்தில் குழந்தைகளை கவரும் வகையில் காமெடியான படங்களில் நடித்து குழந்தைகளின் நாயகனாக வலம் வந்தார் சிவகார்த்திகேயன். இன்று ஹீரோவாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சினிமாவில் ஒரு சிறந்த பன்முக கலைஞராக சிவகார்த்திகேயன் இருந்துவருகிறார்.

sibi

sibi

இந்த நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரே ஒரு படம் எடுத்து மாபெரும் ஹிட் கொடுத்ததன் மூலம் பி.எம்.டபிள்யூ காரை சமீபத்தில் வாங்கியிருக்கிறார் ஒரு இயக்குனர். அவர் வேறு யாருமில்லை. இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. சிவகார்த்திகேயனை வைத்து டான் என்ற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தவர் சிபி.சக்கரவர்த்தி. அந்தப் படம் வெளியாகி 100 கோடி கிளப்பிலும் இணைந்தது.

இதையும் படிங்க: என் பாட்டு எனக்கு மட்டும்!.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா.. இதுக்கு எண்டே இல்லயா!..

அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் , நானிக்கு ஒரு கதை என அடுத்தடுத்து அப்டேட்டில் இருந்த சிபி சக்கரவர்த்தியின் எந்த ப்ராஜக்ட்டும் டேக் ஆஃப் ஆகாமல் இருக்க மறுபடியும் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க போவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. இந்த நிலையில்தான் சிபி சக்கரவர்த்தி சமீபத்தில் ஒரு பி.எம்.டபிள்யூ காரை வாங்கியிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் ஒரே ஒரு படம்தான். அதற்குள் செல்வ செழிப்பான வாழ்க்கை என்று கமெண்டில் கூறி வருகிறார்கள்.

 

Related Articles

Next Story