10 வருஷமா எங்கிட்ட கமல் பேசவே இல்லை… யார் கண்ணு பட்டுதோ தெரியல… இயக்குனர் ஃபீலிங்!

by sankaran v |   ( Updated:2025-05-05 01:55:59  )
kamal
X

kamal

பாலசந்தரின் சீடர்களில் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. கமல், ரஜினி என இரு பெரும் ஜாம்பவான்களுக்கும் சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். கமலுக்கு சத்யா, இந்திரன், சந்திரன், ஆளவந்தான் படங்களை இயக்கினார்.

இவற்றில் முதல் 2 படங்களும் சூப்பர்ஹிட். ஆளவந்தான் உலகத்தரத்தில் பேசப்பட்டது. அதே நேரம் ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா என இரு சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார். கமல் உடனான தனது அனுபவங்களை இப்படி பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.

ஏக்துஜே கேலியே படத்துல அசிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா. அந்தப் படத்தில் அவரது ஒர்க்கைப் பார்த்து கமலே அசந்து போனார். அதன்பிறகு நல்ல ஒரு புரிதல் இருந்தது. அதன் காரணமாக சத்யா படத்தை இயக்கினேன். சூப்பர்ஹிட். தொடர்ந்து இந்திரடு சந்திரடு என்ற தெலுங்கு படத்தை இயக்கினேன். அதுவும் சூப்பர்ஹிட்.

சத்யா படத்துக்குப் பிறகு 89ல என் கல்யாணத்துக்கு குருவாயூர் வந்தாரு. அவரும் சந்தானபாரதி சாரும் வந்தாங்க. என்னை ஆசிர்வதித்தாரு. தொடர்ந்து சென்னையில ரிசப்ஷன். அங்கும் வந்தாரு. ரொம்ப மகிழச்சியாக இருந்தது என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

#image_title

ஆனால் அதன்பிறகு அவர் சொன்ன வார்த்தைகள் ரொம்பவே ஃபீலிங்காக இருந்தது. என்ன சொல்றாருன்னு பாருங்க. சத்யாவுக்குப் பிறகு வந்த படம்தான் இந்திரடு சந்திரடு. அதுவும் சூப்பர்ஹிட். அதன்பிறகு யார் கண்ணு பட்டுதுன்னு தெரியல. 10 வருஷமா எங்களுக்குள்ள எந்த தொடர்பும் இல்லை. அவரு எங்கிட்ட பேசவே இல்லை. என்னோட லைஃப் லைனைக் கட் பண்ணிட்டாரு.

அதுக்கு அப்புறம்தான் ஆளவந்தான்ல சந்திச்சேன். இவ்ளோ குளோஸா இருந்துட்டு பேசலன்னதும் ரொம்ப ஃபீல் பண்ணினேன். எனக்கு பிரதர் மாதிரி இருந்தாரு. 92ல எதிர்பாராதவிதமா அண்ணாமலை படத்துக்கு வாய்ப்பு கிடைச்சது. அங்கு ரஜினி சாரோட நட்பு கிடைச்சது. அந்த டிராவலையும் மறக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story