Connect with us

Vijay: விஜய் என் காலில் விழுந்து அழுதார் – வெங்கட் பிரபு சொன்ன அந்த சம்பவம்

Cinema History

Vijay: விஜய் என் காலில் விழுந்து அழுதார் – வெங்கட் பிரபு சொன்ன அந்த சம்பவம்

தமிழ் சினிமாவில் வசூல் கிங் என்றால் தற்போதைக்கு விஜய் மட்டுமே. அவரது ஒவ்வொரு படமுமே வசூலில் ஒரு பெஞ்ச் மார்க் ஏற்படுத்தும். தற்போது அரசியல் கட்சி துவங்கி முழு அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். அவரது கடசி படமான ஜன நாயகனுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம் கோட். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை கொடுத்தது. அந்த படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியபோது, காந்தி கதாபாத்திரம் அவனுடைய பையனிடம் கை எடுத்து கும்பிட்டு என்னை மன்னிச்சிடுடா என்று சொல்கிற மாதிரிதான் நான் எழுதியிருந்தேன். ஆனால் விஜய் சார் தான் இல்லடா நான் என் பையன் காலில் விழுந்து அவன் காலை பிடித்து அழுது மன்னிப்பு கெட்கிறேன் என்று சொன்னார். கொஞ்ச நேரம் அந்த காட்சி பற்றி பேசிகொண்டிருந்தோம்.

அப்போது விஜய் இரு இப்போ நடித்து காட்டுகிறேன் என்று கூறி அந்த ரோட்டுலயே என் காலில் விழுந்து அழுது காட்டினாரு. அந்த சீன் தவறாக போய்விடக்கூடாது என்று நான் நினைத்தேன். ஆனால் திரையரங்கில் அந்த காட்சியின் எமோஷன் நன்றாகவே ஒர்கவுட் ஆகியது என்று கூறினார்.

To Top