மலையாளப்பட உலகில் புரட்சியை செய்த எம்புரான்… முதல்நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

by sankaran v |   ( Updated:2025-03-27 20:58:48  )
empuraan
X

empuraan

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படத்திற்கு லூசிபர் 2 எம்புரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று படம் பிரம்மாண்டமாக வெளியானது. டிரெய்லர் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. அப்போதே படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். எம்புரான் மலையாளப்பட உலகில் முதல் நாளில் முதல் தடவையாக உலகளவில் 50 கோடியைத் தாண்டி வசூலைக் குவித்த படம் ஆகி உள்ளது.

இதற்கு முன் பாலிவுட்டில் சென்னை எக்ஸ்பிரஸ், டோலிவுட்டில் பாகுபலி, கோலிவுட்டில் கபாலி . சேன்டல்வுட்டில் கேஜிஎப் 2 படங்கள் மட்டுமே இத்தகைய சாதனையைப் படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மல்லுவுட்டான மலையாள உலகிலும் அந்த சாதனை இடம்பிடித்துள்ளது தெரியவருகிறது.

empuran22019ல் வெளியான லூசிபர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்போது அதன் 2ம் பாகம் உருவாகி உள்ளது. படத்தில் மோகன்லாலுடன் இணைந்து டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் புரியாது. அரசியல் துரோகிகளைக் களை எடுப்பதுதான் படத்தின் கதை. முதல் நாளில் இதன் வசூல் எவ்வளவு தெரியுமா? முன்கூட்டிய கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் இதன் வசூல் 22 கோடி.

எம்புரான் படத்தில் அனைத்துக் கேரக்டர்களுக்கும் இயக்குனர் பிருத்விராஜ் சமமான முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார். படத்தின் ஒரே மைனஸ் பின்னணி இசை தான். இதுல சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் ஒளிப்பதிவு எல்லாம் ஹாலிவுட் தரம்தான். படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வரும் நிலையில் இதன் வசூல் வரும் நாள்களில் எகிறும் என்றே தெரிகிறது.

கடந்த காலங்களில் திரில்லர் படங்கள் டிரெண்டாக இருந்தன. சமீபகாலமாக அரசியல் கதைகளம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்து விட்டன. எம்புரானைத் தொடர்ந்து ஜனநாயகன், பராசக்தி படங்களும் அரசியல் பின்னணி கதைகளங்கள்தான் என்று தெரிகிறது.

Next Story