More
Categories: latest news television news

எதிர்நீச்சல்: ஆவேசத்தில் ஈஸ்வரி… அடி வாங்கிய கதிர்… புலம்பி தள்ளும் நந்தினி…

நேற்றைய எபிசோடில் ஞானத்துக்கும் ரேணுகாவிற்கும் சண்டை ஏற்பட அனைவரும் ரேணுகாவை சமையலறையில் சமாதானப்படுத்துகின்றனர். பின் நந்தினிக்கு முதியோர் இல்லத்தில் இருந்து தொடர்ந்து அழைப்பு வருவதாக கூறுகிறார். முதியோர் இல்லத்திலிருந்து கொடுத்த முன் தொகையை திரும்ப தருமாறு கேட்பதாக கூறுகிறார்.

மேலும் இந்த வீட்டில் நமக்கு யாரும் எந்த வகையிலும் உதவ மாட்டார்கள் என்றும் மேலும் நாம் இறந்தால் கூட உண்மையாய் இறந்தோமா என சோதித்து பார்ப்பார்கள் எனவும் கூறி வேதனை அடைகிறாள்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:இப்படி நின்னா கண்ட்ரோல்லாம் காணாம போயிடும்!.. இளசுகளை சோதிக்கும் யாஷிகா ஆனந்த்..

பின் மறுநாள் காலையில் ஞானம், கதிர், கரிகாலன் அனைவரும் வீட்டில் உள்ள பெண்களை தேடுகின்றனர். ஆனால் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி எங்கு தேடியும் இல்லை. பின் கதிரின் அம்மாவிடம் அனைவரும் எங்கே என கேட்கும் பொழுது அவரும் தெரியவில்லை என கூறிவிடுகிறார்.

பின் அனைவரும் மாடியில் இருப்பதை அறிந்து அங்கு அனைவரும் செல்கின்றனர். அங்கு சென்று ஈஸ்வரியின் மாமியார் காபி போடுமாறு கூறுகிறார். ஆனால் அங்கிருந்த அனைவரும் அதனை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கின்றனர்.

பின்  வழக்கம்போல் பேச்சுவார்த்தை முற்றிபோக ஜீவானந்தத்தின் மகளை அவரிடம் கொண்டுவிட்டதை அனைவரும் அறிகின்றனர். ஈஸ்வரியின் மாமியார் அந்த குழந்தையின் அம்மா வெளிநாட்டில் இருந்து வர 15 நாட்கள் ஆகும்னு சொன்ன. அவளோட அப்பாவுக்கு அதுக்குள்ள உடம்பு சரி ஆகிட்டா. நீ ஏதோ ஒரு தப்பு பன்ற என ஈஸ்வரியிடம் கோபப்படுகிறார்.

இதையும் வாசிங்க:சிறகடிக்க ஆசை: விஜயாவை கழுவி ஊற்றிய அண்ணாமலை நண்பர்… முத்துவிடம் சிக்கிய மனோஜ்…

பின் ஈஸ்வரியிடம் கதிர் வாதாடுகிறார். அப்போது ஈஸ்வரியோ அந்த செருப்பு எங்கிருந்து கிடைத்ததோ அந்த இடத்திற்கு தன்னை அழைத்து செல்லுமாறும் மேலும் தானே தனது கணவனை கண்டு பிடித்து கொள்கிறேன் எனவும் கூறுகிறார். அதற்கு ஞானம் அதெல்லாம் வேண்டாம் அண்ணி..நாங்க பாத்துகிறோம் என கூறுகிறார்.

பின் தர்ஷனும் கதிரிடம் தனது அப்பா இருக்கும் இடத்தை கூறுமாறு கேட்கிறார். அப்போது ஆத்திரமடைந்த கதிர் அன்னைக்கு நீயும் தர்ஷினியும் இதே இடத்துல இருந்துதான ஜீவானந்தம் நமக்கு அப்பாவா வந்துருக்கலாம்னு சொன்னீங்க..இன்னைக்கு பெரிய அப்பா பாசத்துல உருகிற… என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி கோபமடைந்து கதிர் அது அவர்களின் ஆதங்கம்…அதைதான் அப்படி பேசிருப்பாங்க என்று கூறுகிறாள். அதற்கு கதிர் அடுத்தவ புருஷன ஆட்டைய போடலாம்னு பாக்கீங்களா என கூற கோபமடைந்த ஈஸ்வரி கதிரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறாள். இவ்வாறாக இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.

இதையும் வாசிங்க:பாக்கியலட்சுமி: செழியனின் திருட்டுத்தனத்தை கண்டுப்பிடித்த பாக்கியா… செம பல்ப் வாங்கிய கோபி..!

Published by
amutha raja

Recent Posts