Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: விஜயாவை கழுவி ஊற்றிய அண்ணாமலை நண்பர்… முத்துவிடம் சிக்கிய மனோஜ்…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த மனோஜ் பரசு சொன்னதை போல மிமிக்ரி செய்கிறார். அதில் உங்க அப்பா வீட்டுக்கு என் பொண்ணை கொடுப்பதில் சந்தோஷம் தான். அதான பாத்தேன் என விஜயா நக்கடிக்கிறார். இருங்க முழுசா சொல்றேன் என்கிறார்.

ஆனா உங்க அம்மா இருக்க வீட்டுல என் பொண்ணை கொடுக்குறதுக்கு ரயில் என்ஜினில் கரி அள்ளி போடுற நிலைமை தான் என்கிறார். என்னால் என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்க முடியாது எனவும் கூறுகிறார். அதை தொடர்ந்து மீனாவையும், முத்துவையும் புகழ்ந்து பேசி ரோகினி இது இவரா சொல்ற மாதிரி இருக்கே என்கிறார்.

இதையும் படிங்க: முதல் பட ஹீரோவை மறக்காத நயன்தாரா!.. புதிய தொழில் தொடங்கியதும் யாரை அழைத்திருக்கிறார் பாருங்க!..

இதையடுத்து அங்கு முத்து ஆடியோ ரெக்கார்ட் செய்து காட்டுகிறார். அண்ணாமலை முத்துவிடம் பரசு பொண்ணை உனக்கு தான் கட்டி வைக்கலாம் என நினைத்தேன் என அண்ணாமலை கூறுகிறார். இதில் கடுப்பான மீனா அறைக்குள் சென்று விட்டார். மீனா மாதிரி மீன் குழம்பு வைக்க முடியுமா என சப்போர்ட் செய்கிறார். பிறகு விஜயாவிடம் இவங்களே பாப்பாங்க பொண்ணு என டயலாக் விட்டு ரூம் செல்கிறார்.

ரூமில் கடுப்பில் இருக்கும் மீனாவிடம் மீன் குழம்பு வச்சு தரியா என்கிறார். அப்போ நான் குழம்பு வைக்கதானா, சமையல் செய்வது அவ்வளவு ஈசி இல்ல. பக்குவமா செய்யணும் என கடுப்பில் சொல்கிறார். சமைக்க மட்டும் தானா நானு என கோபமாக கேட்கிறார். இதை தொடர்ந்து இருவரும் ரொமான்ஸ் மூடுக்கு செல்கின்றனர்.

இதையும் படிங்க: வாய்க்கொழுப்பால் புடுங்கப்பட்ட பீஸ்!.. கெட்டதுலயும் ஒரு நல்லது நடத்துருக்காம்.. இவரும் பிக் பாஸுக்கு போறாரா?..

இதையடுத்து ரோகினியும், முத்துவும் சண்டை போட அண்ணாமலை சமாதானம் செய்கிறார். அதையடுத்து விஜயா நீங்க இனிமே ரவிக்கு பொண்ணு பார்க்க வேண்டாம். நானே பெரிய வீட்டில பெண்ணு பாத்திட்டேன் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top