முதல் பட ஹீரோவை மறக்காத நயன்தாரா!.. புதிய தொழில் தொடங்கியதும் யாரை அழைத்திருக்கிறார் பாருங்க!..

நடிகை நயன்தாரா புதிதாக அழகு சாதன பொருட்களின் நிறுவனத்தை தொடங்கி உள்ள நிலையில், இன்று கடைக்கு பூஜை போட்டு ஆரம்பித்துள்ளார். தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து 9 ஸ்கின் நிறுவனத்தை தொடங்கி உள்ள நிலையில், அதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், மிகவும் முக்கியமாக தனது முதல் பட ஹீரோவையும் அழைத்திருக்கிறார் லேடி சூப்பர்ஸ்டார் என்பது தான் அனைவரது அட்ராக்‌ஷனையும் ஈர்த்திருக்கிறது.

இதையும் படிங்க: அடுத்த பொங்கலும் செம போர்!.. வரிசை கட்டியிருக்கும் 4 படங்கள்.. நாங்க ஊருக்கே போறோம் சிவாஜி!..

நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், டீ கடை பிசினஸ், ரியல் எஸ்டேட், கால் டாக்ஸி என பல தொழில்களை நடத்தி வருகிறார்.

தனியாக விமானத்தையே வாங்கி வைத்திருக்கும் நயன்தாரா அதையும் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், சர்வதேச மாடல் அழகிகள், பாலிவுட் நடிகைகள் போல அழகு சாதன நிறுவனத்தை ஆரம்பித்து மிகப்பெரிய கோடீஸ்வரியாக திட்டம் போட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘லியோ’ ஆடியோ லாஞ்ச் நடக்காம போனதுக்கு நாங்கதான் காரணம்!.. தயாரிப்பாளர் பகீர் பேட்டி!..

ஏற்கனவே பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ள நிலையில், 9 ஸ்கின் நிறுவனத்தை நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு வந்து லாபத்தை அள்ள காத்திருக்கிறார்.

நடிகை நயன்தாரா மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த முதல் படம் என்றால் அது சரத்குமார் ஹீரோவாக நடித்த ஐயா திரைப்படம் தான். அந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். சரத்குமாருடன் இணைந்து தலைமகன் படத்திலும் நயன்தாரா ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இந்நிலையில், ஐயா துரையை அழைத்து தனது கடையை திறக்க வைத்து விட்டாரா நயன்தாரா என தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். நடிகர் சரத்குமாருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

Related Articles

Next Story