நம்ம ஊர்ல எப்போ ரிலீஸ் பண்றீங்க!.. விருது விழாவில் தயாரிப்பாளரிடம் போட்டு வாங்கிய ராம்!..

சர்வதேச திரைப்பட விருது விழாவான ரோட்டர்டாமில் ஏழு கடல் ஏழு மலை படம் பெரிய படங்களுக்கான போட்டியில் பங்கேற்று இன்று திரையிடப்பட்டது. அதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தின் ஹீரோ நிவின் பாலி, ஹீரோயின் அஞ்சலி மற்றும் நடிகர் சூரி படத்தின் இயக்குநர் ராம் உடன் நெதர்லாந்துக்கு சென்றுள்ளனர்.

அங்கே படக்குழுவினர் முதல் முறையாக ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்கு வந்ததே பெரிய விஷயமாக இருக்கிறது என சூரி, அஞ்சலி மற்றும் நிவின் பாலி தெரிவித்தனர். அதற்காக இயக்குநர் ராம் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அட்லீ குழந்தைக்கு அதுக்குள்ள ஒரு வயசு ஆகிடுச்சா!.. பிறந்தநாளை எங்கே கொண்டாடுறாங்க பாருங்க!..

பிரேமம், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட மலையாள படங்கள் மூலம் கவனம் ஈர்த்து வந்த நிவின் பாலி மம்மூட்டியே ராம் படத்தில் நடிக்கிறாரே நாம ஒரு படத்தில் நடிக்கக் கூடாதா? என இந்த படத்தில் நடிக்க கமிட் ஆனார்.

வித்தியாசமான திரைக்கதையில் உருவாகி உள்ள இந்த படம் சர்வதேச விருது விழாக்களுக்கு சென்று வரும் நிலையில், இது ஒரு சீரியஸான படம் என நினைக்க வேண்டாம் இது ஒரு கமர்ஷியல் படம் தான் என அஞ்சலி மற்றும் சூரி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் படத்தை எப்போண்ணா ரிலீஸ் பண்றீங்க என சுரேஷ் காமாட்சியிடம் போட்டு வாங்கினார் ராம். கடைசியில் மார்ச் அல்லது ஏப்ரலில் கோடை விடுமுறை கொண்டாட்ட படமாக ஏழு கடல் ஏழு மலை ரிலீஸ் ஆகும் என தெரிவித்தனர்.

 

Related Articles

Next Story