More
Categories: Entertainment News

எத்தனை நாளைக்குதான் இப்படி?!.. ரேஷ்மா கொஞ்சம் இரக்கம் காட்டும்மா!….

ஆந்திராவை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அமெரிக்காவில் டிகிரி படித்தார். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்தார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கூட இவர் பணிபுரிந்தார். சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. அப்படித்தான் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா.

Advertising
Advertising

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். அதேநேரம், விமல் நடிப்பில் சமீபத்தில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலாமாக புடவை அணிந்து மட்டுமே போஸ் கொடுத்து வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘எத்தனை நாளைக்குதான் இப்படி?!.. ரேஷ்மா கொஞ்சம் இரக்கம் காட்டும்மா!’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts