More
Categories: Cinema News latest news

நீயா நானா பாத்துக்கலாம்.! போர்க்களத்திற்கு தயாரான ரசிகர்கள்.!

கொரோனா முதல் அலை ஓய்ந்த பின்னர் தியேட்டர்ளை சரிவில் இருந்து மீட்க வெளியான திரைப்படம் விஜயின் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மீண்டும் மக்களை தியேட்டர் நோக்கி வர வைத்தது. அதன் பிறகு இரண்டாம் அலைக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் மாநாடு போன்ற திரைப்படங்களின் மாபெரும் வெற்றி மீண்டும் மக்களை தியேட்டருக்கு வர வைத்தது.

Advertising
Advertising

தற்போது மூன்றாவது அலை கொஞ்சம் தனித்துள்ளது. கட்டுப்பாடுகள் கொஞ்சம் நீங்கி தியேட்டர்கள் மீண்டும் பழைய நிலையில் திறக்கப்பட்டன. கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகிவிடும். மீண்டும் மக்கள் தியேட்டருக்கு தைரியமாக வந்துவிடுவார்கள் என நம்பி கொண்டிருந்த வேளையில் கட்டுப்பாடுகள் அதிகரித்து அந்த பட ரிலீஸ்கள் தள்ளிப்போயின.

இதில் அடுத்து ரிலீஸ்க்கு ரெடியாகி இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, பாண்டிராஜ் இயக்கிவருகிறார். இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என ஏறிவிக்கப்பட்டுவிட்டது. கொரோனா தொற்று காரணமாக படம் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

இந்நிலையில், தியேட்டரை காப்பாற்ற போவது சூர்யாவின் எதற்கும் துணிந்தவனா அல்லது அஜித்குமாரின் வலிமை திரைப்படமா என ரசிகர்களை போல தியேட்டர் உரிமையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்களேன்- எல்லாரும் சாவுங்க.! எனக்கு ‘அது’ வேணும்.! அடம்பிடிக்கும் வத்திக்குச்சி வனிதா.!

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் மற்றும் வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி-24 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படமும் பிப்ரவரி-24 அன்று வெளியானால் இரண்டும் மோதவுள்ளது என்று தானே அர்த்தம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஒருவேளை வலிமை படம் வெளியானால் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி தள்ளிபோக வாய்ப்பு இருக்கிறது. எது என்னவோ, எது வெளியானாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் தியேட்டர் கலகலக்க போகிறது. சரி…என்ன நடக்கப் போவது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
Manikandan

Recent Posts