எம்.ஜி.ஆர் ஆரம்பிச்சி வச்சத நான் முடிச்சிருக்கேன்!.. போறபோக்குல அள்ளிவிடும் சிவகார்த்திகேயன்!..

Ayalan: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தப் படியாக அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த குறுகிய நாள்களில் இவ்ளோ பெரிய சாதனையை பெற்று சிறந்த நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது.

இதையும் படிங்க: படிப்பு வரலன்னா சாகணுமா?!.. மகளுக்காக மல்லுக்கட்டும் வத்திக்குச்சி வனிதா!….

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் அயலான். நேற்றுஇன்றுநாளை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்தான் ரவிக்குமார்.

அந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக ப்ரடக்‌ஷனிலேயே இருந்த அயலான் திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: செதுக்குனா கூட இந்த சேஃப் வராது!.. சைனிங் உடம்பை காட்டி கிறங்க வைக்கும் விஜே கீர்த்தி..

5வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்திற்கு பாடலை முடித்துக் கொடுத்த ரஹ்மான் அது பழசாகியிருக்கும். இப்போது இரண்டு புதிய பாடல்களை கொடுக்கிறேன் என்று மிகவும் மெனக்கிட்டு கொடுத்திருக்கிறாராம்.

மேலும் இந்தப் படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த மாதிரி ஏலியன் கதையில் படம் எடுக்க வேண்டும் என ஆரம்பத்தில் எம்ஜிஆர் முயற்சி செய்தாராம். ஆனால் அவரால் எடுக்க முடியவில்லையாம்.

இதையும் படிங்க: லோகேஷ் இத செஞ்சது ரொம்ப பெருமையா இருக்கு! என்ன ஆண்டவரே நீங்களா இப்படி சொல்றது?

அவருக்கு அடுத்தப் படியாக தமிழ் சினிமாவில் ஏலியன் கதையில் நடித்தவர் சிவகார்த்திகேயன்தானாம். இதை நேற்று நடந்த டீஸர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கூறினார்.கூறியதோடு மட்டுமில்லாமல் இதை வைத்து எம்ஜிஆருக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன் என்று தயவு செய்து எழுதி விடாதீர்கள் என்றும் நிரூபர்களிடம் கேட்டுக் கொண்டார்.

 

Related Articles

Next Story