Categories: latest news

Flash back: கடும் போதையில் வாலி… போலீஸில் மாட்ட சதி… கண்ணதாசனின் சூப்பர் ஐடியா!

கண்ணதாசனுக்குப் பிறகு வந்தவர் தான் வாலி. இருந்தாலும் அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில பாடல்களை எழுதினார். அவற்றை எல்லாம் பார்க்கும்போது இது கண்ணதாசன்தான் எழுதி இருப்பாரோ என்றெல்லாம் சந்தேகம் வரும். அந்த வகையில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா அனைத்து வகைப் பாடல்களையும் பல தலைமுறை நடிகர்களுக்கும் எழுதி புகழ்பெற்றவர் வாலி. இவரை திரையுலகில் வாலிபக்கவிஞர் என்றே செல்லமாக அழைப்பர்.

வாலியைப் பொருத்தவரை தன்னைவிட இளவயது பாடகர்கள் ஆனாலும் சரி. அவர்கள் எழுதியது பிடித்து இருந்தால் பாராட்டத் தயங்க மாட்டார். வாலி முதலில் போட்டி போட்டது கண்ணதாசனுடன்தான். ஒரு கட்டத்தில் கண்ணதாசனைக் காட்டிலும் வாலியே பாடல்கள் அதிகம் எழுதினார். அப்போது கண்ணதாசன் ஒரு பார்ட்டி வைத்தார்.

அதில் வாலியும் இணைந்தார். மதுஇ மாது என அந்தப் பார்ட்டி களை கட்டியது. ஒரே அறைக்குள் போதையோடு வாலி நுழைந்துள்ளார். அப்போது கண்ணதாசனிடம் அவரது உதவியாளர் ‘இதுதான் சரியான நேரம். காவல்துறையில் சொன்னால் இந்த ஓட்டலுக்கு வந்து வாலியைக் கையோடு கைது செய்து விடுவார்கள். அவரது மார்க்கெட்டும் சரிந்து விடும்’என்று ஐடியா கொடுத்தார்.

கண்ணதாசனுக்கோ வந்ததே கோபம் ‘அதெல்லாம் செய்வது துரோகம். அதை மட்டும் செய்யக்கூடாது. வாலி எப்போது இந்த அறையை விட்டு வெளியே வருகிறாரோ அதுவரை நீ காத்திருந்து அவரை காரில் அழைத்து வீட்டில் விட்டு விட்டு வா’ என்று சொல்லிவிட்டு சென்றார்.

வாலியின் காதுகளிலும் இந்த சேதி விழுந்திருக்கிறது. கண்ணதாசன் சென்ற பிறகு வாலி அந்த உதவியாளரிடம் சென்றார். நான் தனது சமூகத்தைக் குறிப்பிட்டு நான் மீன் சாப்பிடுபவன். என்னை நீ நினைக்கும்படி வீழ்த்த முடியாது என்கிற ரீதியில் கத்தி விட்டு கண்ணதாசனை நினைத்து நெகிழ்ந்து போனாராம். வாலியே இந்தத் தகவலை தனது நினைவு நாடாக்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago