Connect with us

எம்எஸ்வி, கண்ணதாசன், டிஎம்எஸ்சுக்கு சிவாஜி விட்ட சவால்… ஜெயித்தது யார்?

latest news

எம்எஸ்வி, கண்ணதாசன், டிஎம்எஸ்சுக்கு சிவாஜி விட்ட சவால்… ஜெயித்தது யார்?

சாந்தி படத்துக்காக எம்எஸ்வி. இசை அமைத்து இருந்த ‘யார் அந்த நிலவு’ என்ற பாடலைக் கேட்டு விட்டு அந்தப் பாடலுக்கு நடிக்க முடியாமல் 2 நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்தார் சிவாஜி. ஆனால் அப்படி ஒரு சூழல் உருவாகக் காரணமே அவர் தான் என்பதுதான் விசேஷம்.

ஒருநாள் எம்எஸ்வி. வீட்டுக்குப் போன் செய்தார் சிவாஜி. ஹாலிவுட்ல கிளிப் ரிச்சர்ட்டுன்னு ஒரு பாடகர் இருக்காரு. அவர் ஸ்லோமோஷன்ல அற்புதமா ஒரு பாட்டைக் கம்போஸ் பண்ணிருக்காரு. அது மாதிரி ஒரு பாடலை உன்னால் கம்போஸ் பண்ண முடியுமான்னு கேட்டுள்ளார்.

அதைக் கேட்டதும் எம்எஸ்வி. என்னால் அதுமாதிரி பாட்டைக் கம்போஸ் பண்ண முடியும். உன்னால் நடிக்க முடியுமான்னு கேட்டுள்ளார். அந்த சவாலை ஏற்றுக் கொண்டதும் எம்எஸ்வி. அரை மணி நேரத்தில் டியூன் போட்டு போனிலேயே கண்ணதாசனிடம் டியூனை விளக்கிச் சொன்னார். கண்ணதாசனும் பாடல் வரிகளை எழுத அதை எடுத்துக் கொண்டு டிஎம்எஸ்சிடம் விளக்கமாக எம்எஸ்வி சொல்லி பாடச் சொன்னார்.

அதற்கு நான் இப்போது வேகமான பாடல்களைப் பாடி ஹிட் கொடுத்து வருகிறேன். ஸ்லோமோஷன்ல பாடுனா எடுபடுமான்னு கேட்டுள்ளார். அதற்கு எம்எஸ்வி. இது சிவாஜி நமக்கு விட்ட சவால். அதனால பாடித்தான் ஆகணும்னு சொல்ல அப்படி உருவான பாடல்தான் ‘யார் அந்த நிலவு’. அதைக் கேட்டதும் எப்படி நடிப்பது? எம்எஸ்வி. வேற சவால் விட்டுள்ளாரேன்னு எப்படி நடிச்சா நல்லாருக்கும்னு யோசிக்க 2 நாள் அவகாசம் எடுத்துக் கொண்டார் சிவாஜி.

1965ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, தேவிகா, எஸ்எஸ்ஆர், விஜயகுமாரி உள்பட பலர் நடித்த படம் சாந்தி. இந்தப் படத்துக்கு எம்எஸ்வி. இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். யார் அந்த நிலவு, நெஞ்சத்திலே நீ, ஊரெங்கும் மாப்பிள்ளை, செந்தூர் முருகன், வாழ்ந்து பார்க்க வேண்டும் ஆகிய பாடல்கள் உள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top