Categories: latest news

குடிசை வீட்டில் வாழ்க்கை!.. இப்போதும் அதை மறக்காத ரஜினி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா!..

Rajinikanth: இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர்தான் ரஜினிகாந்த். தோனி, சச்சின் தெண்டுகல்கர், ஷாருக்கான் கூட அவரை ‘தலைவா’ என அழைக்கிறர்கள் என்றால் கடந்த 50 வருடங்களில் அவர் உருவாக்கி வைத்திருக்கும் அந்த இமேஜ். அதற்காக அவர் போட்ட உழைப்பு. இப்போது தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு அவரிடம் பணம் இருக்கிறது.

சினிமாவில் வாய்ப்பு: ஆனால், அவரின் துவக்கம் அப்படி இல்லை. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்தவர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் நண்பரின் துணையோடு சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து நடிகரானவர். அந்த வாய்ப்பு கிடைக்கும் வரை அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல.

மாத வாடகைக்கு மிகவும் சின்ன அறையில் தங்கியிருக்கிறார். பகலில் அந்த அறையில் இருக்கவே முடியாது. ஏனெனில், கீழே ஹோட்டலுக்காக சமைப்பார்கள் என்பதால் அறை சூடாகவே இருக்குமாம். எனவே, வெளியே சுற்றிவிட்டு இரவில் மட்டுமே அறைக்கு வருவாராம் ரஜினி. ஈரத்துணியை கீழே விரித்துதான் தூங்குவாராம்.

குடிசை வாழ்க்கை: மேலும், ராயப்பேட்டையில் ஒரு குடிசையில் நண்பர்களுடன் அவர் தங்கியிருந்தது பலருக்கும் தெரியாது. பின்னாளில் ரஜினியை வைத்து பல படங்களை இயக்கி அவரை ஸ்டார் நடிகராக மாற்றிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

ராயப்பேட்டையில் குடிசையில் தங்கியிருந்தார் ரஜினி. நானே அங்கு சென்று அவரிடம் கதையை சொல்லி கால்ஷீட் வாங்கி வருவேன். பின்னாளில் அவர் வளர்ந்து போயஸ்கார்டனில் வீடு கட்டியபோது என்னை ஒரு நாள் சாப்பிட அழைத்தார். வீட்டின் மொட்டை மாடியில் ஒரு குடிசை இருந்தது. ‘இதை ஏன் அகற்றாமல் வைத்திருக்கிறாய்?’ என அவரிடம் கேட்டேன்.

‘சார் பழச மறந்துட்டீங்களா!. நான் குடிசையிலதான் இருந்தேன். எவ்வளவு வசதி வந்தாலும் பழச மறக்கக்கூடாதுன்னுதான் இதை வச்சிருக்கேன். என சொல்லி அன்று அதில்தான் சாப்பிட்டார். சில சமயம் அதில் படுத்து தூங்கவும் செய்வார். இதுதான் உண்மையான ரஜினி’ என பேசியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago