Categories: latest news

அக்னி நட்சத்திரம் படம் சந்தித்த சவால்… அப்புறமா அதுக்கு இவ்வளவு வரவேற்பா?

மணிரத்னம் படம் என்றாலே இருட்டுன்னு தான் சொல்வாங்க. ஆனால் அதே சமயம் அந்த இருட்டிலும் அவர் காட்டும் வெளிச்சக் கீற்றுகள் பார்ப்பதற்கு வெகு அருமையாக இருக்கும். அது அவரது பிராண்டாகவே சொல்லப்படுவதும் உண்டு.

அப்படி எடுத்துக் கொண்டால் அவரது பல படங்களைச் சொல்லலாம். நாயகன், அஞ்சலி, பம்பாய், தளபதி, அக்னி நட்சத்திரம், ராவணன், பொன்னியின் செல்வன் என வரிசையாக பல படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்தப் படங்களுக்குள் முக்கியமாக ஒளிப்பதிவு ஒரே மாதிரியாக இருக்கும். இவரது படங்களில் ஆரம்பத்தில் பி.சி.ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவுக்கான வேலையைச் செய்து வந்தார். அதுவும் கனகச்சிதமாக இருக்கும். அவரது ஒளிப்பதிவு பேசப்படும் வகையில் இருக்கும்.

மணிரத்னம் தயாரிப்பு, இயக்கம், திரைக்கதையாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் படங்களில் எல்லா கேரக்டர்களுமே சுருக்கமாக வசனம் பேசுவார்கள். அது ஒரு தடவை பார்த்தால் புரியாது. படத்தை இன்னொரு முறை பார்த்தால் தான் அடடா என்ன அழகாகப் பேசுகிறார்கள் என்று சிலாகிக்கத் தோன்றும்.

இதற்காகவே சிலர் ஒரு தடவைக்கு இருதடவையாக அவரது படத்தைப் பார்த்து ரசிப்பதும் உண்டு. அந்த வகையில் 1988ல் அவரது இயக்கத்தில் வெளியான படம் அக்னி நட்சத்திரம். படத்தில் பிரபு, கார்த்திக் ஆகியோருடன் அமலா, நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் வெகு அருமை. அதைக் காட்சிப்படுத்திய விதமும் அருமை. ஒரு பூங்காவனம், ரோஜா பூ, வா வா அன்பே, நின்னுக்கோரி வரணும், ராஜா ராஜாதி, தூங்காத விழிகள் ஆகிய முத்து முத்தான பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு ஒரு சவால் இருந்தது. அது என்னன்னு பார்ப்போமா…

akni natchathram

அக்னி நட்சத்திரம் படத்தில் அமலா வரும் காட்சிகள் எல்லாமே சிறப்பாக இருக்கும். பாடல்களும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் படத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

இன்று மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படம் தமிழ்சினிமாவில் எந்தளவுக்குக் கொண்டாடப்படுகிறதோ அந்தளவுக்கு படத்தில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் கொண்டாடப்படுகிறது. தமிழ்சினிமாவைப் பொருத்தவரை ஆரம்பகால கட்டத்தில் எந்தப் புதுமையையும் அவ்வளவு ஈசியா ஏத்துக்க மாட்டோம். அப்படிப்பட்ட ஒரு சவாலை அக்னி நட்சத்திரமும் சந்திக்க நேர்ந்ததுஎன்பது தான் உண்மை.

அந்தப் படம் வெளியான சமயத்தில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு முறை பெருமளவில் விவாதிக்கப்பட்டது. இன்றைக்கு அதுவே மாறி பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவை எல்லோரும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

13 hours ago