More
Categories: Cinema News latest news

மகள்களால் வந்த பிரச்சனை!.. குடும்ப பிரச்சினையால் குலைந்து போன ஷங்கரின் திரைப்பட வாழ்க்கை!..

மகள்களால் ஷங்கருக்கு வந்த பிரச்சனை!!..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் சங்கர் அவர்கள் தற்சமயம் இந்தியன் பாகம் 2 மற்றும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இயக்கி வருகிறார். ஆனால் தற்சமயம் இந்த இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக பணிகள் நடைபெறாமல் முடங்கி கிடக்கின்றன. இதற்கு காரணம் இயக்குனர் சங்கர் அவர்களின் குடும்ப பிரச்சனை என்று சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து தன்னுடைய இரண்டு மகள்களும் சங்கர் அவர்களை படாத பாடு படுத்தி வருகிறார் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

குறிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இரண்டு மகள் இருப்பது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. இதில் முதலில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் கமலஹாசன் அவர்களுக்கும் இரண்டு மகள்கள் இதனை அடுத்து இயக்குனர் சங்கர் அவர்களுக்கும் இரண்டு மகள்கள். இதில் சங்கரின் மூத்த மகளுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது பாண்டிச்சேரியில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள்.

Advertising
Advertising

Shankar daughter

மூத்த மகளுக்கு வந்த பிரச்சனை:

இந்த நிலையில் அவர் ஷங்கரை விட இரண்டு மடங்கு பணக்காரர் எப்படியும் 2000 கோடிக்கு அதிபரும் அவர். அந்த அளவிற்கு பணக்கார மாப்பிள்ளையை பிடித்திருக்கிறார் சங்கர். அதில் தான் அவருக்கு ஒரு பிரச்சனை ஆரம்பமானது, எந்த அளவிற்கு மாப்பிள்ளை பணக்காரராக இருக்கிறாரோ அந்த அளவிற்கு பிரச்சனையும் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இவ்வளவு பணக்கார மாப்பிள்ளையை எதற்காக கல்யாணம் பண்ணனும் நார்மலா சாதாரண ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணி இருந்தா கூட நிம்மதியா வாழ்ந்திருக்கலாம் ஆனா இப்படி பணக்கார பையனுக்கு கல்யாணம் பண்ணிட்டு அவர் படாத பாடு பட்டு வருகிறார்.

இதையும் படிங்க- கல்யாணமே பண்ணிக்காம வாழ்க்கையை தொலைத்த ஐந்து நடிகைகள்!!.. இப்படி நடிச்சா எப்படி கல்யாணம் ஆகும்!!..

 

aditi shankar

இந்த நிலையில் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது தந்தையிடம் தனது கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக தந்தையிடம் அழுது புலம்பி இருக்கிறார்.இதனை எதிர்த்து மாப்பிள்ளை வீட்டில் இருப்பவரிடம் கேள்வி கேட்ட இயக்குனர் சங்கர்க்கு அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியை தந்தது.என்னுடைய மகன் அப்படி பட்ட பையன் இல்லை.உங்கள் மகள் பொய் சொல்றா அப்டின்னு சொல்லி இருக்காங்க.

அதற்கு அவர்கள் முடிந்தால் உன்னுடைய பெண்ணை அனுப்பி வையுங்கள் இல்லையென்றால் நீங்களே வச்சுக்கோங்க அப்படின்னு தெனாவெட்டா சொல்லிட்டாங்க. இதனை கேட்டதும் அவர நொறுங்கிப் போய்விட்டார். இப்படி சொந்த மகள் வாழ்க்கை இப்படி பாலானது நினைத்து நினைத்து திரைப்படங்களில் முழுமையாக பணியாற்ற முடியாமல் இருந்து வருகிறார் இயக்குனர் சங்கர்.

Aishwariya shankar

அடம் பிடிக்கும் இரண்டாவது மகள்:

மூத்த மகளின் வாழ்க்கை தான் இப்படி பாலாய் போய்விட்டது சரி,இரண்டாவது மகள் சொல்றத கேப்பானு பார்த்தா வம்படியா திரைப்படத்தில் நடிபேனு அடம்பிடிச்சு விரும்பன் திரைப்படத்தில் நடிச்சாங்க. ஆனா அந்தத் திரைப்படம் தான் கடைசி திரைப்படம் அதுக்கப்புறம் நான் படம் நடிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதற்கு ஓகே சொல்லி தான் படத்துல நடிக்க அனுமதி கொடுத்தார் சங்கர். இதனை அடுத்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் எனும் திரைப்படத்தில் கமிட்டாய் இருப்பது இயக்குனர் சங்கரிக்கு தெரியாமல் போய்விட்டது.

பிறகு அவர் தெரிந்ததும் விருமன் படத்தோடு திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன் என்று தானே சொல்லியிருந்த இப்போ எதுக்கு இன்னொரு படத்துல கமிட்டாய் இருக்க அப்படின்னு சங்கர் கேட்க..அதற்கு அதிதி எனக்கு இதுதான் பா புடிச்சிருக்கு நான் இப்படித்தான் இருப்பேன் அப்படின்னு தெனாவெட்டா இளைய பொண்ணும் சொல்ல.. தனது இரண்டு பெண்களுடைய வாழ்க்கையும் இப்படி வீணாவதை பார்த்த இயக்குனர் சங்கர் நொந்து நூலாகி போய்விட்டார்.

சினிமாவில் இருக்கும் எந்த பிரமுகரின் மகளானாலும் சரி திரைப்படங்களில் நடிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள் அந்த வகையில் இயக்குனர் சங்கர் தன்னுடைய மகள் சினிமாவில் நடிப்பதை துளி அளவும் விரும்பாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது சங்கருக்கு மிகுந்த சோதனை காலம் என்றே சொல்லலாம். எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றால் எதுவுமே பண்ண முடியாது அந்த அளவிற்கு கவலையாக உள்ளது என்று கூறலாம்.

இதையும் படிங்க- கல்யாணமே பண்ணிக்காம வாழ்க்கையை தொலைத்த ஐந்து நடிகைகள்!!.. இப்படி நடிச்சா எப்படி கல்யாணம் ஆகும்!!..

Published by
prakash kumar

Recent Posts