ஒரு பாட்டுக்கு ஆறு மாசமா டியூன் போட்ட எம்.எஸ்.வி.. அந்த பாட்டுக்காகவே படம் ஹிட்!…

தமிழ் சினிமாவில் பாட்டு என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். பல பேர் துன்பங்களிலிருந்து விடுபட அவர்களுக்கு பிடித்தமான பாடலைக் கேட்டு தான் அவர்களுடைய துன்பங்களை போக்கிக் கொள்கிறார்கள். இன்றளவும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் தான் பல பேருக்கு மருந்தாக பயன்பட்டு வருகின்றது.

இளையராஜாவுக்கு முன்பு வரை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் அமைந்த பாடலை தான் அந்த காலத்தில் அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர். தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இருந்து இவர் பெயரை மட்டும் நம்மால் அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது.

இதையும் படிங்க: சினிமால கூட இப்படி காட்டலயே!.. வேறலெவலில் காட்டி கிறங்கவைக்கும் ராஷி கண்ணா…

இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிறகு தான் இசை என்றால் இவ்வளவு இனிமையாக இருக்குமா? என்ற ஒரு ஆச்சரியத்தை வரவழைத்தது. இவர் இசையமைக்கும் வேகத்தை பார்த்து தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிசயத்து போனார்கள். இவருடன் சேர்ந்து இவருடைய நண்பர் ராமமூர்த்தியும் இணைய தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டனர்.

இருவரும் சேர்ந்து எக்கச்சக்கமான வெற்றி பாடல்களை கொடுத்து வரும் நிலையில் இருவருக்கும் இடையில் ஒரு கட்டத்திற்கு மேல் பிரிவு ஏற்பட இருவரும் தனித்தனியாக இசையமைக்க தொடங்கினார்கள். அப்படி இருவரும் சேர்ந்து இசையமைத்த பாடலில் மாபெரும் வெற்றி பெற்ற பாடலாக அமைந்தது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் அமைந்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல்.

இதையும் படிங்க: பிடிக்கலனா போங்க! வேற ஹீரோவ வச்சு சக்சஸ் பண்ணி காட்டுறேன்.. கார்த்திக்கிடம் சவால் விட்ட இயக்குனர்!

இந்தப் படம் அந்த காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதுவும் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படம் காதலின் ஆழத்தை மிகவும் வித்தியாசமாக காண்பித்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடலும் ஒருவகையில் காரணமாக அமைந்தன.

இந்த அளவுக்கு வெற்றி பெற காரணம் என்ன என்பது இப்போதுதான் தெரிகின்றது. இந்த ஒரு பாடலை இசை அமைக்க விஸ்வநாதன் ஆறு மாதம் காலம் எடுத்துக் கொண்டாராம். கிட்டத்தட்ட 250 டியூன்கள் போட்டும் ஸ்ரீதருக்கு எதிலுமே உடன்பாடு இல்லையாம். அதன் பிறகு தான் இந்த ஒரு டியூனில் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை பிரபல சினிமா பத்திரிக்கையாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் முதல் சயின்ஸ் பிக்சன் படம்!.. பாடலில் பட்டைய கிளப்பிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!..

Rohini

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago