ஏலேய்! ஒன்னு இருந்தாலே முடியாது… இதுல நாலு சேந்தா!! தரையில நடந்தத திரையில காட்ட போறாங்களாமே!

Red card: தமிழ் சினிமா பிரபலங்கள் எப்போதுமே ரொம்ப பொறுப்பாக ஷூட்டிங் போவார்கள் எனக் கேட்டால் அதில் சில சேட்டைக்காரர்கள் இருக்கதான் செய்வார்கள். அந்த லிஸ்ட்டில் இருந்த முக்கிய நாலு டிக்கெட்டுக்கு தான் சமீபத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

ஷூட்டிங் ஒழுங்கா வராத சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வா ஆகிய நாலு முன்னணி ஹீரோக்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் அவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: பூஜ்ஜியமாகும் கோபி… அப்பா ரூட்டில் ஜொல்லு பார்ட்டியான செழியன்…

சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வரவில்லை எனக் கூறி மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் பேரில் முதலில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சில காலம் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அந்த தடையை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் எல்லாமே மாஸ் ஹிட் ரகம் தான்.

தற்போது இவர் மீது ஐசரி கணேஷ் கொடுத்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தற்போது சிம்புவுக்கு ரெட் கார்டு தரப்பட்டுள்ளது. தனுஷும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்த படத்தில் ஏற்பட்ட பிரச்னையால் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ரெட் கார்டு வாங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: தொல்லை செய்த விஜயா… மீண்டும் வட்டிக்கு வாங்கி கடனை அடைத்த ரோகினி…

இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு படம் எடுத்து அந்த தொகையை பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் ஐடியா இருப்பதாக திரை விமர்சகர் செய்யாறு ரவி தெரிவித்து இருக்கிறார். மேலும் கூறியவர், இந்த படத்துக்கு ரெட் கார்டு என பெயர் வைக்க இருக்கின்றனர்.

அதில், விஷால், தனுஷ், சிம்பு மற்றும் அதர்வாவை நடிக்கவும் வைக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் சிம்புவும், தனுஷும் இணைந்து நடிப்பார்களா? இந்த விஷயம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நடக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

 

Related Articles

Next Story