அவரால் தான் எனக்கு இந்த கொடுமை… அவர் சந்தோஷமா தான் இருந்தார்.. தந்தையை வறுத்தெடுக்க கௌதம் கார்த்திக்!

80களில் பிஸி நடிகர்களாக இருந்தவர்களின் மகன்கள் தமிழ் சினிமாவிற்குள் வருவது புதிது இல்லை என்றாலும் அதில் சிலர் தான் தங்களை அடையாளப்படுத்தி கொண்டு தனித்து நிற்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் தான் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்.

நடிகர் கார்த்திக் மற்றும் அவர் முதல் மனைவி ராகினிக்கு முதல் மகனாக பிறந்தவர் கௌதம். இவரின் ஒன்பது வயதில் கார்த்திக் தன்னுடைய மனைவியை விட்டு வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் கௌதம் தன்னுடைய தாயுடன் ஊட்டியில் வளர்ந்தார். கார்த்திக்கை வருடம் ஒருமுறை மட்டுமே வந்து பார்த்து செல்வாராம்.

இதையும் படிங்க: இளையராஜா இதை செய்யவே மாட்டார்… அதனாலே நடுக்கமா இருக்கும்… ஆனா? ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன தகவல்!

தன்னுடன் நடித்த சக நடிகையான மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை மஞ்சிமா, கௌதம் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் கௌதம் தனது தந்தை கார்த்திக் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில், அப்பா என் அம்மாவை விட்டு வேறு திருமணம் செய்து கொண்டதால் தான் எங்களால் குடும்பமாக வாழ முடியவில்லை. அவரை பிரிந்து இருந்தோம். இந்த தனிமை எனக்கு கொடுமையாக இருந்தது.

இதையும் படிங்க: லோகேஷ் கையிலெடுக்கும் ரோலக்ஸ்!.. வெறித்தனமா களமிறங்கும் சூர்யா!.. பரபர அப்டேட்!…

கார்த்திக் தன்னுடன் நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கௌதமிற்கு ஒன்பது வயது இருக்கும் போது ராகினியின் தங்கை ரதியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story