Cinema History
வில்லன் வேடத்தில் மிரட்டிய ஜெமினிகணேசன்… ஒப்புக்கொள்ள வைத்த பிரபல நடிகை!
மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் வல்லவனுக்கு வல்லவன். அந்தப் படத்தில் ஜெமினிகணேசன், அசோகன் ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள். அந்தப் படத்தில் எதிர்மறை கதாநாயகனாக ஜெமினிகணேசன் நடித்து இருந்தார்.
அந்த வில்லன் கதாபாத்திரத்தில் சஸ்பென்ஸ் இருந்ததால ரெகுலராக திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர்கள் யார் நடித்தாலும் அந்தப் படம் வெற்றி பெறாது. ஒரு கதாநாயகன் நடித்தால் தான் வெற்றி பெறும் என்று எண்ணிய ராமசுந்தரம் அந்தப் படத்தில் ஜெமினிகணேசன் நடித்தால் தான் வெற்றி பெறும் என்று எண்ணினார். ஆனாலும் ஜெமினிகணேசன்கிட்ட போய் யார் பேசி அவர் ஒப்புக்கொள்ள வைப்பார்?
அதற்காக அவங்க தேர்ந்தெடுத்த ஒரு சரியான தூதுவர்தான் மனோரமா. அவர்தான் ஜெமினிகணேசன்கிட்ட பேசி அந்தக் கதையைப் பற்றி சொல்லி இந்தக் கதை இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கதையா இருக்கு. இதுல நீங்க நடிச்சீங்கன்னா நிச்சயமாக வெற்றி பெறும். அந்தப் படத்தைப் பார்க்கும்போது அதன் கதைப்போக்கை அவ்வளவு எளிதில் யாரும் யூகித்து விட முடியாது. அந்தளவுக்கு மிகச்சிறப்பாக அந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.
ராமசுந்தரத்தின் இயக்கத்தில் உருவான வல்லவனுக்கு வல்லவன் மாபெரும் வெற்றிப்படமாக மாடர்ன் தியேட்டர்ஸ்சுக்கு அமைந்தது என்றால் அதற்கு முக்கியமான காரணம் ஜெமினிகணேசன் அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
1965ம் ஆண்டு ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான படம் வல்லவனுக்கு வல்லவன். இந்தப் படத்தில் ஜெமினிகணேசன், தங்கவேலு, அசோகன், ராமதாஸ், மணிமாலா, சாவித்ரி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். வேதா இசை அமைத்துள்ளார். இது ஒரு அதிரடி திரில்லர் படம். மாடர்ன் தியேட்டர்ஸின் 100வது படமும் இதுதான். ஓர் ஆயிரம் பார்வையிலே, மனம் என்னும் மேடை மேலே ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.
