latest news

250 கோடி கடன்!.. மீண்டும் கடனாளியான ஞானவேல் ராஜா!.. அமீரை பேசிய கர்மா!….

நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா.. அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்திவீரன் படமே இவரின் முதல் தயாரிப்பு. ஆனால், அந்த படம் பட்ஜெட்டை தாண்டி சென்றதால் ‘இனிமேல் நான் படத்திற்கு செலவு செய்ய மாட்டேன்.. நீங்களே படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என சொல்லி அமீரிடம் படத்தை கொடுத்துவிட்டார் ஞானவேல் ராஜா.

எனவே, நண்பர்களிடம் கடன் வாங்கி அமீர் அந்த படத்தை எடுத்து முடித்தார்.. படத்தை பார்த்து விட்டு ‘படத்தை எனக்கே எழுதி கொடுத்து விடுங்கள்.. நீங்கள் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன்’ என தயாரிப்பாளர் சங்கம் மூலம் அமீரை கூப்பிட்டு பேசி படத்தை எழுதி வாங்கிக்கொண்டார் ஞானவேல் ராஜா. படம் லாபம் என்றாலும் அமீர் செலவு செய்த 2 கோடியை ஞானவேல் ராஜா திருப்பி தரவில்லை.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு அமீர் பலமுறை அலைந்தும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு கூட இந்த விஷயம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. அப்போது அமீரை திருடன், மோசடி பேர்வழி என்றெல்லாம் விமர்சித்து பாரதிராஜா போன்ற இயக்குனர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் ஞானவேல் ராஜா. மேலும், சூர்யாவை வைத்து அதிக பட்ஜெட்டில் ஞானவேல் ராஜா தயாரித்த கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவியது..

இந்த படத்தின் புரோமோஷன் விழாவில் பயங்கர பில்டப் கொடுத்தார் ஞானவேல் ராஜா. படம் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றார். ஆனால் படமோ 100 கோடி கூட வசூல் செய்யவில்லை. இந்த படத்தின் மூலம் 200 கோடி கடனாளியானார் ஞானவேல் ராஜா. அதன் பின் சூர்யாவின் முயற்சியில் அந்த கடன்களை அடைத்துவிட்டதாக செய்திகள் வெளியானது. எனக்கு இப்போது கடனே இல்லை என அறிவித்தார் ஞானவேல் ராஜா.

இந்நிலையில், கார்த்தியை வைத்து அவர் தயாரித்த வா வாத்தியார் திரைப்படம் மூலம் மீண்டும் கடனாளியாகியிருக்கிறார் ஞானவேல் ராஜா. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வி. எனவே, இந்த படத்தை வாங்கி வெளியிட்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா வினியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டம். எனவே 50 கோடி வரை திருப்பி தர வேண்டிய நிலையில் இருக்கிறார் ஞானவேல் ராஜா. தமிழ்நாடு வினியோகஸ்தருக்கு கொடுக்க வேண்டிய 10 கோடிக்காக சென்னையில் உள்ள தனக்கு சொந்தமான தியேட்டரை அவருக்கு எழுதி கொடுத்து விட்டாராம் ஞானவேல் ராஜா..

அமீருக்கு 2 கோடியை திருப்பி தராததோடு, அவரை ஃபிராட் என திட்டிய ஞானவேல் ராஜா 250 கோடி கடனாளியாகி இனிமேல் சினிமாவே எடுக்க முடியாத நிலைக்கு போய்விட்டார். இதுதான் ‘கர்மா’ என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

8 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

9 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

14 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

16 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

17 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

19 hours ago