அண்ணன் வரார் வழி விடு… புஷ்பா2 படத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய கோட்…

GoatMovie: பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தற்போது கோலிவுட்டின் முக்கிய ஐகானாக இருக்கிறார். அந்த வகையில் விஜய் தன்னுடைய அடுத்த படமான கோட் திரைப்படத்தில் முக்கிய விஷயம் ஒன்று நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தினை தயாரித்து வருகிறார். வெங்கட் பிரபு இப்படத்தினை இயக்கி வருகிறார். விஜய், சினேகா, லைலா, மீனாட்சி செள்த்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: அஜித் கொடுத்தது ஆஃபர் இல்ல! ஆப்பு.. சும்மானாலும் இருந்திருப்பேன்! வேதனையில் தயாரிப்பாளர்

ஜெமினிமேன் என்ற ஹாலிவுட் படத்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு கேரக்டர் வில்லன் வேடமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. முதல் சிங்கிள் விசில் போடு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதனால் இரண்டாவது சிங்கிளை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு கொடுக்க படக்குழு திட்டமிட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சிங்கிளில் நடிகை திரிஷா கேமியோ ரோலில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: கோபியை காலி பண்ண காத்திருக்கும் ராதிகா… நடுக்கத்தில் ஈஸ்வரி… சிக்கிட்டீங்களே!

இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க்கிடம் எல்லா மொழிகளுக்கும் சேர்த்து 93 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. இது எல்லா படங்களை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன் தென்னிந்தியாவில் லியோ மற்றும் பீஸ்ட் படம் 73 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், புஷ்பா இரண்டாம் பாகத்தின் தென்னிந்திய சேட்டிலைட் உரிமை மட்டும் 65 கோடிக்கு விற்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து விஜயின் தளபதி69 திரைப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் அதன் உரிமை தொகை இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story