Connect with us
ajith

Cinema News

அஜித் கொடுத்தது ஆஃபர் இல்ல! ஆப்பு.. சும்மானாலும் இருந்திருப்பேன்! வேதனையில் தயாரிப்பாளர்

Actor Ajith: நடிகர் அஜித் ஒரு தயாரிப்பாளரிடம் படம் பண்ணுவதாக சொல்லி அதுவே பின்னாடி அந்த தயாரிப்பாளருக்கு ஆப்பாக அமைந்த ஒரு சம்பவம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். அவருடைய விடா முயற்சி திரைப்படம் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் விடாமுயற்சி படத்தை டீலில் விட்டு இன்றிலிருந்து குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அஜித்.

அதற்கான பூஜை இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் போடப்பட்டது. அதனால் இனிமேல் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட் பற்றிய செய்திதான் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கண்ணதாசன் சினிமாவில் பாடல் எழுதுவதற்கு முன்னால் என்ன வேலை செய்தார் தெரியுமா?

அஜித் இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான வி. ஞானவேலு. இவர் தமிழில்  ‘செல்லமே’,  ‘பொற்காலம்’,   ‘தவசி’, ‘ ஏப்ரல் மாதத்தில்’ போன்ற பல படங்களை தயாரித்தவர். இவர்தான் அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அதாவது அஜித்தே தாமாக முன்வந்து  ‘ஜி நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா’ என கேட்டதாகவும் அதற்கு ஞானவேலு சம்மதம் தெரிவித்து அதற்கான ஸ்கிரிப்ட்டை தேடிக் கொண்டிருந்ததாகவும் அந்த ஒரு பேட்டியில் அவர் கூறினார்.

மேலும் அஜித்தே தேடி வந்ததால் நம்முடன் தானே இருக்கிறார் அஜித். அதனால் அவருக்காக ஒரு நல்ல ஸ்கிரிப்ட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாராம் ஞானவேலு. இதற்கிடையில் அஜித்தை நெருங்க முடியாத சில பேர் ஞானவேலிடம் வந்து அஜித்திற்கு படம் பண்ணப் போகிறார்களாமே? எனக் கேட்க அதற்கு ஞானவேலு  ‘ஆமாம். ஆனால் ஸ்கிரிப்ட் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்று தான் சொன்னாராம்.

இதையும் படிங்க: விடாமுயற்சி அப்புறம் பாப்போம்!. டீலில் விட்ட அஜித்!.. குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்டார்ட்!..

இதை அந்த சில பேர் அஜித் ஒரு பத்து பேருடன் பேசிக் கொண்டிருக்கையில்  ‘எங்களையெல்லாம் விட்டுவிட்டு அந்த ஞானவேலுவை தேடி போகிறீர்களாமே?’ இதை ஞானவேலு அனைவரிடமும்  ‘என்னை தேடி அடிக்கடி அஜித் வந்து கொண்டிருப்பதாக அனைவரிடமும் சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறார்’ என அஜித்திடம் கூறியிருக்கிறார்கள். இதுவே பின்னாடி ஞானவேலுக்கு பெரிய ஆப்பாக முடிந்தது என ஒரு பேட்டியில் ஞானவேலுவே கூறினார்.

gnana

gnana

ஏனெனில் அஜித்தை பொறுத்த வரைக்கும் அவரைப் பற்றி தேவையில்லாத சில தகவல்கள் வெளியே பரவும் ஆனால் அதை அவர் விரும்பவே மாட்டார். அதிலிருந்து அவர் விலகி நிற்கத்தான் செய்வார். அதனால் அவருடன் சேர்ந்து படம் பண்ணாமலேயே போய்விட்டது என ஞானவேலு கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top