Connect with us

Cinema News

சினிமா மோகம்.. நடிகர் பின்னால் கூட்டம்!.. இனிமேலாவது கவுண்டமணி சொல்றத கேளுங்கப்பா!..

சினிமா என்றாலே ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் வந்து விடுகிறது. அது எங்கிருந்து தான் வருகிறதோ என்று தெரியவில்லை. ஒரு நடிகரைப் பார்க்க வேண்டும் என்றால் கட்டுக்கடங்காத கூட்டம். அதிலும் நடிகையைக் கடை திறக்க அழைத்தால் போதும். அந்த இடமே டிராபிக் ஜாம் ஆகிவிடும். நடிகை தான் திறக்க வருகிறார் என்று தெரிந்ததும், அந்தக் கடையைப் பற்றித் தான் ஊரெங்கும் பேச்சாக இருக்கும்.

அப்போதே அந்தக் கடையும் பிரபலமாகி விடும். இது தான் வியாபார யுக்தி. அது மட்டுமா… ஜவுளிக்கடை, நகைக்கடை, பேன்ஸி ஸ்டோர், கிப்ட் சென்டர், ஸ்டூடியோ, சலூன் கடை என எங்கு பார்த்தாலும் நடிகர், நடிகைகள் தான் முன் வந்து போஸ் கொடுக்கின்றனர்.

Goundamani, Senthil

Goundamani, Senthil

சினிமா வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது. பொது இடங்களுக்கு நடிகர் ஒருவர் வந்துவிட்டால் அவரது காரை விரட்டி விரட்டிச் சென்று பார்த்து விடுகின்றனர். எங்காவது சூட்டிங் நடந்தால் இப்படித் தான் ஓடோடிப் போய் தான் பார்ப்பதோடு மட்டும் அல்லாமல் ஊரில் இருக்கும் தன்னோட நண்பர்களை எல்லாம் போன் போட்டு வரச் செய்து விடுகிறார்கள்.

ஓட்டு போடும் இடத்திற்கு நடிகர் வந்தால் அவர் கூடவே சேர்ந்து செல்பி எடுக்கின்றனர். முன்பு கையெழுத்து வாங்கினார்கள். இப்போது செல்பி அவ்வளவு தான் வித்தியாசம். சோஷியல் மீடியாக்களிலும் நடிகர், நடிகையரைப் பின் தொடர்பவர்கள் தான் அதிகம். அங்கு சினிமா செய்திகளுக்குத் தான் லைக்குகள் குவிகின்றன. கமெண்ட்டுகளும் களைகட்டுகின்றன.

பாலியல் புகாரில் முதல் இடம் பிடிப்பதற்கு எத்தனையோ துறைகள் இருந்தாலும் அவை எல்லாம் வெளியே தெரிவதில்லை. சினிமா என்றால் மூக்கு வியர்த்துவிடுகிறது. அந்த செய்தியே ஒரு வாரத்திற்குப் பேசுபொருளாகிவிடுகிறது.

நமக்கு எல்லாம் ஒரு தொழில் உண்டு. ஒவ்வொருவருக்கும் சம்பாதிப்பதற்கு என்று ஒரு வேலை இருக்கும். அது போலத் தான் நடிகர், நடிகைகளுக்கும். அது அவர்களது தொழில். அவ்வளவு தான். இது தெரியாமல் அவர்கள் படம் வெளியானால் கட் அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம். 100 அடிக்கு போஸ்டர்கள், தோரணங்கள் என பணத்தை வாரி இறைக்கிறார்கள் அப்பாவி ரசிகர்கள்.

சினிமாவில் நடிப்பதற்கு நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். ரசிகர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பது கூட தெரியாமல் இதுபோன்ற செயல்களைப் பெருமையாகக் கருதி சிலர் செய்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் கவுண்டமணி ஒருமுறை தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களிடம் இப்படி கூறியிருக்கிறார். காசு கொடுத்தாங்க. நடிச்சேன். அது என்னுடைய தொழில். அதை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இப்படி என்னைப் பார்க்க வருவதெல்லாம் வேண்டாம். போய் உங்க குடும்பத்தைக் கவனிங்கப்பா எனக் கூறியுள்ளார். இது இப்படியிருக்க இதற்கும் ஊடகங்களில் ஒரு மீம்ஸ் போட்டு கலாய்த்து இருக்காங்க.

google news
Continue Reading

More in Cinema News

To Top