Connect with us
mgr

Cinema History

எம்.ஜி.ஆர் போட்ட பிச்சைலதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்… இப்படி சொன்ன பிரபலம் யார் தெரியுமா?…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இன்றளவும் மக்கள் மத்தியில் போற்றப்படக் காரணம் அவர் செய்த உதவிகள் தான். எத்தனையோ பேருக்கு அவர்களது கஷ்ட காலத்தில் உதவி செய்துள்ளார். பிரதிபலன் எதுவும் செய்யாமல் அவர் செய்த உதவிகள் தான் அவரை ஒரு மகத்தான மனிதராக மாற்றியது.

அந்த வகையில் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷூக்கு நடந்த வெடிவிபத்தின் போது அவரது காலைக் காப்பாற்றியவரே எம்ஜிஆர் தானாம். அவரது அலுவலகம் வீடு முழுவதும் எம்ஜிஆர் புகைப்படங்களாகவே உள்ளன. நான் இப்போது உயிரோடு இருக்கக் காரணமே எம்ஜிஆர் போட்ட பிச்சை தான் என்கிறார். இதுகுறித்து இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

இதையும் படிங்க… அஜித், விஜயை விட்டு கார்த்திக்கிடம் போனதுதான் பெரிய தப்பு! புலம்பும் தயாரிப்பாளர்

1986ல் நடந்த ஒரு வெடிவிபத்தில் என் கால்கள் 3 துண்டாகி விட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் ஒன்றரை வருஷம் இருந்தேன். எம்ஜிஆர் தான் எல்லா செலவுகளையும் பார்த்தார். டாக்டர்கள் எல்லாம் காலை எடுத்துருமான்னு கேட்டாங்க. நான் கூட ரொம்ப பயந்துட்டேன். எம்ஜிஆர் அதை ஒத்துக்கவே மாட்டேன்னுட்டார். நீங்க இதை ஒரு சேலஞ்சா வைத்து அவன் எப்படி நடப்பானோ, எப்படி ஓடுவானோ அதே போல மாற்றிக் கொடுங்கன்னு கேட்டார். அதன்பிறகு தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன். இது எம்ஜிஆர் போட்ட பிச்சை என்கிறார்.

Sankar Ganesh

Sankar Ganesh

1967ல் மகராசி என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ். இவரது திரையுலக வாழ்வில் மைல் கல்லாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... பைக் மெக்கானிக் டூ மாஸ் நடிகர்!.. அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத அரிய தகவல்கள்!..

நான் ஏன் பிறந்தேன், இதயவீணை, தாயில்லாமல் நானில்லை, நீயா, டார்லிங் டார்லிங் டார்லிங், ரங்கா, மங்கம்மா சபதம், ஊர்க்காவலன், எங்க சின்ன ராசா உள்பட பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இசை அமைத்தவர் சங்கர் கணேஷ் தான். இவர் கடைசியாக இசை அமைத்த படம் பாரம்பரியம். 1993ல் வெளியானது.

google news
Continue Reading

More in Cinema History

To Top