நான் நடிச்சிருந்தா இன்னிக்கு அந்த ஹீரோ இருந்திருக்க மாட்டார்! நகுல் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

Actor Nakul: சினிமாவைப் பொறுத்த வரைக்கும் வாய்ப்பு என்பது ஒரு வரப் பிரசாதம். அதை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே சினிமாவில் நாம் கொண்ட லட்சியத்தை அடைய முடியும். அது போக நம் திறமையும் நமக்கு கை கொடுக்க வேண்டும். இந்த இரண்டு மட்டும் இருந்தால் சினிமாவில் ஒரு பெரிய உயரத்தை அடைய முடியும். அந்த வகையில் பிரபல நடிகர் நகுல் தனக்கு வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாததால் இன்றுவரை வருத்தப்படுவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

நடிகை தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக முதன் முதலாக அறிமுகமானார். அதற்கு முன் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். பாய்ஸ் திரைப்படத்தில் ஒரு செகண்ட் ஹீரோவாகத்தான் நகுல் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தில் மிகவும் பப்லியாக பார்க்கவே ஒரு காமெடி தனமாக இருந்திருப்பார்.

இதையும் படிங்க: நீங்க உருட்டுறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்… சிறகடிக்க ஆசையால் கோபத்தில் ரசிகர்கள்!…

ஆனால் காதலில் விழுந்தேன் படத்தில் ஒரு சார்மிங்கான ஹீரோவாக தோன்றி ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மாசிலாமணி போன்ற ஒரு சில படங்களில் நடித்து வந்த நகுல் இடையிலேயே காணாமல் போனார். இருந்தாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியம் என்ற குறிக்கோளில் இருக்கிறார் நகுல். இந்த நிலையில் தான் தவறவிட்ட இரண்டு படங்களை பற்றி நகுல் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

முதலில் தேவயானி நடித்த ஒரு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நகுல் வாய்ப்பு வந்ததாம். இயக்குனர் நகுலிடம் கேட்க நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொல்லி அந்த வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டாராம். இதனால் நகுலின் அம்மா மிகவும் வருத்தப்பட்டாராம்.

அதன் பிறகு ஒரு படம் நகுலுக்கு வந்ததாம். அந்தப் படத்தில் ஒரு வெயிட்டான ரோல் என்று சொல்லி ‘நான் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் இன்று ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர் சினிமாவில் இருந்திருக்கவே மாட்டார். ஏனெனில் அந்த அளவுக்கு அது முக்கியமான கேரக்டர்.

அந்த கேரக்டரில் நடித்ததனால்தான் அந்த நடிகர் என்று ஒரு பெரிய ஹீரோவாக மக்கள் முன் பிரதிபலிக்கிறார். அந்த வாய்ப்பையும் நான் தவறவிட்டேன்’ என நகுல் கூறினார். ஆனால் யார் அந்த நடிகர் என்பதை நான் சொல்ல மாட்டேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: தனுஷுடன் பழகிய பின் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டு பெருசா போகுதே!..

 

Related Articles

Next Story