மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாரே! பிறந்தநாளின் போது ரசிகர்களுக்கு கண்டெண்ட் கொடுத்த இசைஞானி

Ilaiyaraja: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இசைக் கலைஞராக கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. அவர் இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்களில் இருந்து திரையுலக பிரபலங்கள் வரை அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

ஆனால் இளையராஜாவின் பிறந்தநாள் உண்மையிலேயே ஜூன் மூன்றாம் தேதி தானாம். கருணாநிதி மீது இருக்கும் மரியாதை காரணமாகத்தான் அவரது பிறந்த நாளை இரண்டாம் தேதி கொண்டாடி வருகிறாராம். அதற்கு காரணம், இன்று நாம் இளையராஜாவை இசை ஞானி என்று மனதார அழைத்து வருகிறோம் என்றால் அந்த பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் தானாம்.

இதையும் படிங்க: இதுதான் சமயம்!.. ஸ்ருதிஹாசனை மேடையில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்!.. கதறவிட்ட தாத்தா!..

அதைப்போல் ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாள் என்பதால் அந்த ஒரு மரியாதை காரணமாகத்தான் இவரது பிறந்த நாளை இரண்டாம் தேதி கொண்டாடி வருகிறாராம். இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து இளையராஜா அவருடைய நன்றிகளை கூறி வருகிறார். அப்போது எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. உங்களுக்காக தான்.

நான் என் மகளை பறிகொடுத்த காரணத்தால் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை நான் விரும்பவில்லை. ஆனால் உங்களுக்காக தான் இந்த கொண்டாட்டம் என செய்தியாளர்களிடம் மிக உருக்கமாக பேசியிருக்கிறார். ஆனால் இதை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? அந்த வீடியோவை முழுவதுமாக ஆராய்ந்து அவரவர் கமெண்ட்களை பதிவிட்டு இருக்கின்றனர்

இதையும் படிங்க: இந்தியன் 2 ஆடியோ லாஞ்சுக்கு வந்த ஹரிசந்திர மகாராஜா!.. யாருன்னு நீங்களே பாருங்க!..

அதில் கொண்டாட்டம் இல்லை. ஆனால் டெக்கரேஷன் எல்லாம் பயங்கரமா இருக்கே என கூறி வருகின்றனர். ஏனெனில் அந்த வீடியோவில் இளையராஜாவின் பின்னாடி அவருடைய வீட்டிற்குள் மாடிப்படியில் இருந்து வீடு முழுவதும் பூ மாலைகளால் டெக்கரேஷன் செய்திருப்பதை பார்க்க முடிந்தது. அதை வைத்து தான் நெட்டிசன்கள் இவ்வாறு கூறியிருக்கின்றனர்.

இன்னும் சிலர் நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது பாஸ் என்ற பாஸ்கரன் பட கிளைமாக்ஸ் மாதிரியே தெரிகிறது என்றும் கூறி இருக்கின்றனர் .ஆனால் இளையராஜாவின் ரசிகர்கள் சிலர் எவ்வளவுதான் விமர்சனங்கள் அவர் மீது கொட்டினாலும் அவருடைய மகளின் இழப்பு என்பது பேரிழப்பு தான். அதை யாரும் கிண்டல் பண்ண வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறகு எவன்டா!.. என்னையை போட்டு அடிக்காதீங்கடா!.. ஆடியோ லாஞ்சில் கதறிய அனிருத்!

ஆனால் சமீப காலமாகவே இளையராஜா ரசிகர்கள் மத்தியில் ஒரு காமெடி பீஸ் ஆகவே மாறி இருக்கிறார். அதற்கு காரணம் காபி ரைட்ஸ் என்ற பெயரில் அடுத்தடுத்து படங்களுக்கு அவர் நோட்டீசை அனுப்பியதுதான். இளையராஜாவின் போக்கு இப்படியே போனால் பாத்ரூமில் கூட நம்மால் இளையராஜாவின் பாடலை பாடிக்கொண்டே குளிக்க முடியாது போல.

அவ்வளவு பெரிய ஞானியாக இருப்பவர் அதைக் கேட்டுவிட்டு கூட நம்மீது கேஸ் போடுவார் என்பதைப் போல நெட்டிசன்கள் அவரை மிகவும் கலாய்த்து வருகிறார்கள். கூடிய சீக்கிரம் இளையராஜா போட்ட இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து ஒரு முடிவு சொன்னால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it