More
Read more!
Categories: Cinema History Cinema News latest news

இதெல்லாம் என்னங்க பாடல்வரி? வைரமுத்துவை குறைச் சொன்ன பிரபல இயக்குனர்… ட்விஸ்ட் கொடுத்த இளையராஜா

Ilaiyaraja: ரெண்டு ஜாம்பவான்கள் சேர்ந்தால் என்ன நடக்கும்? கண்டிப்பாக எதுவும் சலசலப்பு இல்லாமல் ஒரு வேலை நடக்காது தானே. அப்படி ஒரு சம்பவம் வைரமுத்துவுக்கு நடந்து இருக்கிறது. ஆனால் இதில் பிரச்னையை சரி செய்த இடத்தில் இருந்தவர் இளையராஜா தான். 

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. மோகன், பூர்ணிமா, எஸ்.வி.சேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல் வரிகளை கங்கை அமரன், வைரமுத்து, முத்துலிங்கம் ஆகியோர் எழுதி இருந்தனர்.

இதையும் படிங்க: செம வைலண்ட்டாக இருந்த ரஜினி!. அம்மாவை போல வந்து காப்பாற்றிய சமூக சேவகி.. ஆச்சர்ய தகவல்!..

இப்படத்தின் இளையநிலா பாடலை வைரமுத்து எழுத வேண்டியதாக இருந்தது. அப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாட வேண்டும். இந்த வரிகளுக்கான டிஸ்கஷனில் வைரமுத்து முதலில் வரிகள் எழுத தொடங்கினார். அதில், “சலவை நிலா பொழிகிறதே… இதயம் வரை நனைகிறதே…” இருந்ததாம். இதை பார்த்த சுந்தர்ராஜன் நிறுத்துங்க என்ன இது சலவை நிலா எனக் கடுப்படுத்து இருக்கிறார்.

என்னதுனா எனக் கேட்க சுந்தர்ராஜன் எனக்கு புரியவில்லை என்றாராம். இதனால் வைரமுத்து முகம் கருகி விட்டது. உங்களுக்கு புரியலைனா தமிழ்நாட்டு நிறைய அறிவாளிகள் இருக்காங்க என்றாராம். இதில் வாக்குவாதம் முற்றியதாம் இருவருக்கும். உடனே கையை போட்டு சுந்தர்ராஜனை தனியே அழைத்து வந்து இருக்கிறார் இளையராஜா. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போங்க.

இதையும் படிங்க: ஒருவழியா கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டாங்கப்பா!… சங்கமத்துக்கு எண்ட் கார்ட் வந்துடுச்சே…

Published by
Akhilan

Recent Posts