பெண் குரல்லயே அசத்தலா பாடிய இளையராஜா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

by sankaran v |   ( Updated:2025-04-18 03:53:44  )
ilaiyaraja
X

ilaiyaraja

Ilaiyaraja: தமிழ்சினிமாவில் 80களில் இசை ராஜாங்கம் நடத்தியவர் இளையராஜா. அது ஒரு இனிய கனாக்காலம். இளையராஜா ஆரம்ப காலகட்டத்துல தன்னோட அண்ணன் பாவலரோட இசைக்கச்சேரிகளில் பாடினாராம். அப்படி ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சிக்கான பிரச்சாரக்கூட்டத்துக்கு இளையராஜாவை பாவலர் அழைச்சிட்டுப் போனாராம்.

அப்போ இருபாலரும் பாடும்படியான ஒரு பிரச்சார பாடலைப் பாவலர் எழுதினாராம். அப்போ பெண் குரல்ல பாட தனது தம்பி இளையராஜாவைத் தான் அழைச்சிட்டுப் போனார் பாவலர். அப்போ இளையராஜாவுக்கு டீன்ஏஜ் ஆரம்பமாகுறதுக்கு முன்னாடி ஆண் குரல் லைட்டா பெண் குரல் சாயல்ல இருந்தது. அதனால அவர் பொருத்தமா இருப்பார்னு பாவலர் அழைச்சிட்டுப் போனாராம்.

அந்த வகையில், 'ஒத்த ரூபாயும் தாரேன். உப்புமா காபியும் தாரேன். ஓட்டுப் போடும் பெண்ணே நீ மாட்டைப் பார்த்துப் பாடு'ன்னு பாவலர் பாடினாராம். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்சின்னமான காங்கிரஸ் அப்போது மாடு சின்னத்துலதான் போட்டியிட்டார்கள்.

'ஒத்த ரூபாயும் வேணாம். உன் உப்புமா காபியும் வேணாம். ஓட்டுப் போட மாட்டேன். நீங்க ஊரைக் கெடுக்குற கூட்டம்'னு அழகா பெண் குரல்ல பாடினாராம் இளையராஜா. இப்படியே ஒரு ரூபாய்ல இருந்து 10 ரூபாய் வரைக்கும் ரெண்டு பேருமே மாறி மாறிப் பாடுவாங்களாம். பைனலா பெண் சொல்றதைக் கேட்டு ஆண் மனசு மாறி கம்யூனிஸ்டுக்கே ஓட்டுப் போடுற மாதிரி பாவலர் அந்தப் பாடலை உருவாக்கினாராம்.

அந்தப் பாடலை மையமாக வச்சித்தான் 'ஒத்த ரூபா தாரேன்' பாடலை அதே சாயல்ல உருவாக்கி இருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடல் எட்டுப்பட்டி ராசாவில் குஷ்பூவின் கலக்கல் நடனத்துடன் இடம்பெற்றது. இப்போது கூட அஜித் மாஸாக நடித்துள்ள குட் பேட் அக்லியில் ரெட்ரோ சாங்காக வலம் வருகிறது.

Next Story