More
Categories: Cinema News latest news

என் பாட்டை யூஸ் பண்றீங்களே ஆண்மை இருக்கா?!.. கத்திய இளையராஜா!. மஞ்சும்மெல் பாய்ஸ் என்னாக போகுதோ!..

Ilaiyaraja: இசை ஜாம்பவான் இசைகளுக்கு அரசன் என தமிழ் சினிமாவில் இசைத்துறையில் கொடி கட்டி பறப்பவர் இசைஞானி இளையராஜா. இவரை பற்றி பெருமைப்பட்டுக் கொள்வதற்கு இசையை தவிற வேறொன்றும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு முன் கோபக்காரர், பிடிவாதம் குணம் படைத்தவர் என பல சம்பவங்கள் இளையராஜாவை மையப்படுத்தி நடந்திருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால் இளையராஜாவால் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என பல பேட்டிகளில் பிரபலங்கள் கூறுவதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில் மலையாளத்தில் வெளியாகி தமிழில் சக்கப் போடு போடும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்ததே க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் குணா படத்தின் கண்மணி பாடல்தான்.

இதையும் படிங்க: கட் பனியனில் கண்டதையும் காட்டும் சீரியல் நடிகை!.. இதுக்கு மேல தாங்காது செல்லம்!..

அந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தவரே இளையராஜாதான். இந்த நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இளையராஜாவின் அனுமதியோடுதான் இந்தப் பாடலை வைத்தார்களா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஒரு வேளை இல்லையென்றால் கண்டிப்பாக இளையராஜா அந்தப் படக்குழு மீது காப்பி ரைட்ஸ் அடிப்படையில் கேஸ் போடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இதே போல் ஒரு பழைய சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. அந்தப் படம் எந்தளவு வெற்றி என அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்திலும் ரஜினியின் தளபதி பட ஒரு பாடலை பயன்படுத்தினாராம் 96 படத்தின் இசையமைப்பாளர்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட அஜித்! இதென்ன சோதனை?..

இது இளையராஜாவின் காதுக்கு தெரியவர ‘என் அனுமதியில்லாமல் என் பாட்டை யூஸ் பண்ணிருக்கீயே உனக்கு ஆண்மை இல்லையா?’ என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தாராம் இளையராஜா. உடனே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பதிலுக்கு ‘ நான் சிறுவயதில் இருந்தே இளையராஜாவின் பாடலை கேட்டு கேட்டு வளர்ந்தவன். அதனால் ஒரு ரசிகன் என்ற அடிப்படையில்தான் தளபதி பட பாடலை சேர்த்தேன். இருந்தாலும் என்னை மன்னித்துவிடுங்கள்’ என பதிலுக்கு அவரும் ஒரு அறிக்கையை விட்டாராம்.

அதனால் இளையராஜாவின் அனுமதி இல்லாமல் மட்டும் அவர் பாடலை படத்தில் பயன்படுத்தினார்கள் என்றால் அவர்கள் கதி அவ்வளவுதான். அதனால் கண்டிப்பாக மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவும் நிச்சயமாக இளையராஜாவின் அனுமதியை பெற்றிருப்பார்கள் என செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: குடும்பத்தையே அலறவிட்ட விஜயா… எம்மா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

Published by
Rohini

Recent Posts