Connect with us

Cinema News

குடும்பத்தையே அலறவிட்ட விஜயா… எம்மா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயாவுக்கு ரோகினி ஃபேஸ் பேக் போட்டு விடுகிறார். அப்போ அங்கு வரும் மீனா இதெல்லாம் எதுக்கு நல்ல தண்ணி குடிச்சு நிறைய பழம் சாப்பிட்டாலே முகம் பொழிவாக இருக்கும் எங்க அம்மா சொல்லி இருக்காங்க என்கிறார்.

இதனால் கடுப்பாகும் விஜயா உங்க அம்மா பெரிய ஸ்கின் டாக்டரா? சுடுதண்ணிய வச்சுட்டு நீ வெளில போ என்கிறார். பின்னர் ரூமில் இருக்கும் ஸ்ருதியும் ரவியும் ஏசியை மாற்றி மாற்றி போட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் ட்ரிப் ஆகி கரண்ட் கட் ஆகிவிடுகிறது. அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க கீழே வருகிறார் முத்து.

இதையும் படிங்க: வேறலெவல் மிரட்டலா இருக்கே.. சச்சின் பந்து போட சூர்யா பேட் ஆடுறாரே!.. இது எப்போ நடந்துச்சு!..

மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க அப்போது முகத்தில் ஃபேஸ் பேக் உடன் வெளியில் வரும் விஜயாவை பார்த்து அலறுகிறார். இதைக் கேட்டு மனோஜ் ரோகினும் வெளியே வர ஏண்டா கத்துற என்கிறார். அவர் கேட்கும் போது விஜயா வந்து பாருடா என்னை பார்த்து கத்துறான் என்கிறார்.

அவரைப் பார்த்த மனோஜும் ரோகினியும் அலறி விழுகின்றனர். இதை  தொடர்ந்து கதவை திறந்து பார்க்கும் முத்து நம்ம வீட்டில் மட்டும்தான் கரண்ட் கட் ஆகியிருக்கிறது.  நான் போய் பார்க்கிறேன் எனக்கூறி கீழே செக் செய்யப் போகிறார். இதை தொடர்ந்து ட்ரிப்பை சரி செய்துவிட கரண்ட் வந்துவிடுகிறது.

ஸ்விட்சை போட்டு போட்டு ஆஃப் பண்ணா தான் இப்படி ஆகும் என முத்து கேட்க ரவி அதான் வந்துச்சுல்ல விடு என்கிறார். இதை தொடர்ந்து ரூமுக்குள் செல்லும் ஸ்ருதி மற்றும் ரவி உன்னால் தான் என மாறி மாறி சண்டை போட்டு கொள்கின்றனர். இதை வெளியில் இருந்த விஜயா கேட்டு விடுகிறார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா உலகில் கதைக்கு பஞ்சமா?… வழிகாட்டுகிறது மஞ்சும்மெல் பாய்ஸ்!… பிரபலம் சொல்வதைக் கேளுங்க…

அடுத்த நாள் மாலைக்கு பூக்கள் வாங்க முத்துவுடன் மார்க்கெட் செல்கிறார் மீனா. அப்போ ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்த இங்கையே இருங்க என மீனா சொல்லிவிட்டு செல்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ட்ராபிக் போலீஸ் வந்துவிட 500 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வருகின்றனர். மீனா டீக்கடையில் நிறுத்த சொல்ல முத்துவும் நிறுத்துகிறார்.

மீனா மட்டும் செல்ல முத்துவையும் டீ குடிக்க அழைக்கிறார். அவர் வர வடையை வாங்கி கொடுக்க டீக்கடைக்காரர் பொண்டாட்டி கூட இப்படி செய்ய மாட்டார் உனக்கு சவாரி வந்தவங்க செய்றாங்க பாரு என்கிறார். அருகில் இருந்த ஒருவர் உண்மையாவே அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தான் நீ சும்மா இரு எனக்கூறி அவருக்கு பல்பு தருகிறார்.

 இதை தொடர்ந்து வீட்டில் இருக்கும் விஜயா சோகமாக உட்கார்ந்து இருக்க அவரிடம் விஷயம் என்ன என்கிறார் அண்ணாமலை. நேத்து நம்ம வீட்ல கரண்ட் கட் ஆச்சுல்ல அதுக்கு காரணம் ஸ்ருதியும் ரவியும் தான். அவங்களுக்கு நடுவுல ஏதோ சண்டே என்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி கிளம்பி வெளியே செல்ல அவரை தடுத்து சண்டையா என விஜயா கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: லால் சலாம் வசூலை அடித்து காலி செய்த மஞ்சும்மெல் பாய்ஸ்!… இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை!..

google news
Continue Reading

More in Cinema News

To Top