குடிகார அண்ணன்! இளையராஜாவை பத்தி கங்கை அமரன் சொன்னது உண்மைதானா?

Ilaiyaraja: இளையராஜாவைப் பற்றிய சர்ச்சைகள் சமீப காலமாக சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவருக்கு ஆதரவாக அவருடைய தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஒரு வீடியோ பகிர்ந்து மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருந்தார். அதாவது வைரமுத்து ஒரு மேடையில் இளையராஜாவை பற்றி குறிப்பிட்டு பேசியதை கங்கை அமரன் ‘நாங்கள் இல்லை என்றால் வைரமுத்து இல்லை. எங்களால் தான் வைரமுத்து வளர்ந்தார்’ என்றெல்லாம் பேசி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இதைப்பற்றி பல ஊடகங்கள் கடமையாக விமர்சித்திருந்தனர். ஏனெனில் அந்த காலத்தில் கவிஞர் யாரையும் இசையமைப்பாளர்கள் இந்த அளவு பேசியதில்லை. கவிஞர்களை மிகவும் மரியாதையாக தான் நடத்தினார்கள். ஆனால் இவர்கள் வைரமுத்துவை இந்த அளவு பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. ஹேண்ட்ஸம் வில்லனா கோட் படத்தில் மிரட்டப்போகும் மோகன்!.. வெளியானது சூப்பர் போஸ்டர்!..

இதே கங்கை அமரன் தான் இளையராஜாவுடன் மனக்கசப்பில் இருக்கும் போது ஒரு கட்டுரையில் இளையராஜா ஒரு குடிகாரன் என குறிப்பிட்டு ஒரு செய்தியை பகிர்ந்து இருந்தார். ஆனால் இப்போது அண்ணனுக்கு ஒத்து ஊதுகிறார் கங்கை அமரன் என பல பிரபலங்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் ஒரு வீடியோவில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார்.

அதில் ரஜினியின் ஒரு படம் பெரியளவு ஹிட்டானதும் அதை கொண்டாடும் வகையில் ரஜினி, பாரதிராஜா இளையராஜா மூன்று பேரும் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கின்றனர். அதில் மூன்று பேரும் நன்றாக குடித்திருந்தார்களாம். மேலும் அந்தப் பார்ட்டியின் போது ரஜினியை பாரதிராஜா ஏதோ ஒரு வாக்குவாதத்தில் கை நீட்டி அடித்ததாகவும் அந்த சம்பவத்திற்கு பிறகு தான் இளையராஜா குடிப்பதையே நிறுத்தினார் என்றும் வலைப்பேச்சு அந்தனன் அந்த பேட்டியில் கூறினார். ஒருவேளை இதைத்தான் குறிப்பிட்டு கங்கை அமரன் அந்த பத்திரிக்கையில் எழுதி இருப்பாரோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை முந்திய சூரி!.. வெற்றிமாறன் படத்தையே இறக்க போறாரு.. அமரன் என்னதான் ஆச்சோ?..

 

Related Articles

Next Story