இன்னும் பெட்டரா வேணும்!.. பாக்கியராஜ் சொன்னதில் கடுப்பாகி கத்திய இளையராஜா.. அந்த சூப்பர் ஹிட் பாட்டா!..

80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல படங்கள் உருவானது. எனவே, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களை காப்பாற்ற வந்த கடவுளாகவே இளையராஜாவை பார்த்தனர். பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தார் இளையராஜா.

எனவே, தங்களின் படங்களுக்கு இசையமைக்க அவர் ஒப்புக்கொண்டால் போதும் என்றே அப்போது எல்லோரும் நினைத்தார்கள். ஒரு படத்தை துவங்கும்போது இளையராஜா கமிட் செய்து விட்டே தயாரிப்பாளர்கள் மற்ற வேலையை துவங்குவார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார் அவர்.

இதையும் படிங்க: குழந்தைகளுடன் வெளிநாட்டில் கொஞ்சி விளையாடும் லேடி சூப்பர்ஸ்டார்!.. ட்வின்ஸ் நல்லா வளர்ந்துட்டாங்களே!

ஆனால், அவரிடம் சண்டை போட்ட சில இயக்குனர்களும் இருக்கிறார்கள். இயக்குனர் பாலச்சந்தர் பல வருடங்கள் இளையராஜா பக்கம் போகவே இல்லை. கமல் சொன்னதால் 6 படங்களில் அவரை பயன்படுத்தினார். அதேபோல், பாக்கியராஜ் துவக்கத்திலிருந்து இளையராஜாவுடன் மோதல் போக்கை கடைபிடித்தார்.

இளையராஜா டியூன் அவருக்கு பிடிக்கவில்லை எனில் அப்படியே ராஜாவிடம் சொல்லிவிடுவார். இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும். தான் இயக்கி நடித்த மௌன கீதங்கள் படத்தில் கூட இளையராஜாவிடம் போகாமல் அவரின் தம்பி கங்கை அமரனை இசையமைக்க வைத்தார். அதனால், பாக்கியராஜ் மீது ராஜாவுக்கு கோபம் வந்தது.

இதையும் படிங்க: திறமை இருந்தும் கதைல கோட்ட விடுற நடிகர்கள்! ஒரு படத்துல மட்டும் பேர் எடுத்தா போதுமா?

ஆனாலும், பாக்கியராஜின் சில படங்களுக்கு அவர் இசையமைத்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்கியராஜ் முந்தானை முடிச்சி படத்தை எடுத்தபோதுதான் பாக்கியராஜுக்கும், ராஜாவுக்கும் அதிகமாக முட்டிகொண்டது. ‘அந்தி வரும் நேரம்’ பாடலுக்கு அற்புதமான பின்னணி இசையை அமைத்திருந்தார் ராஜா. அவர் அதை வாசித்துக்காட்ட ’எனக்கு பிடிக்கவில்லை’ என பட்டென சொல்லிவிட்டார் பாக்கியராஜ்.

இதனால் கோபப்பட்டு ராஜா கத்த ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்து வெளியே போய்விட்டார் பாக்கியராஜ். அதன்பின் நானே இசையமைக்கிறேன் என சொல்லி அவர் இயக்கிய சில படங்களுக்கு பாக்கியராஜே இசையமைத்தார். மேலும், ராஜா பக்கம் போகாமல் சந்திரபோஸ் போன்ற இசை அமைப்பாளர்களை தனது படங்களில் பயன்படுத்தினார் பாக்கியராஜ்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

2 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

2 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

9 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

10 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

12 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago