‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலை பாடி பவதாரிணிக்கு விடை கொடுத்த குடும்பத்தினர்...

Bhavatharini: தனது இசையால் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை தாலாட்டி வருபவர்தான் இசைஞானி இளையராஜா. இவரின் மகள் பவதாரிணி சமீபத்தில் மரணமடைந்தது எல்லோரையும் அதிர்ச்சியாக்கியது. அப்பா இசையமைப்பாளர் என்பதால் சிறு வயது முதலே பவதாரிணிக்கும் இசையில் ஆர்வம் ஏற்பட்டது.

முறையாக இசையை கற்றும் கொண்டார். ராசைய்யா படம் மூலம் சினிமாவில் பாட துவங்கினார். அதன்பின் காதலுக்கு மரியாதை உட்பட இளையராஜா இசையமைத்த பல படங்களிலும் அவர் பாடல்களை பாடியிருக்கிறார். 2000ம் வருடம் பாரதி படத்தில் அவர் பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடல் அவருக்கு தேசிய விருதையும் பெற்று கொடுத்தது.

இதையும் படிங்க: 4 கோடி போனா போகட்டும்!.. ஆனா அமீருக்கு கொடுக்க மாட்டேன்!.. சூர்யா செய்வது சரியா?…

திடீரென அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி வெளியானது. ஏனெனில் அதற்கு முன் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக ஒரு செய்தி கூட வெளியாகவில்லை. ஆனால், அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்ததாகவும், அதற்காக இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை அவர் எடுத்துக்கொண்ட நிலையில் அங்கேயே அவர் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

அதன்பின்னர்தான் பவதாரிணி உடல்நிலை குறித்த தகவல்கள் வெளிவர துவங்கியது. முதலில் அவருக்கு வயிற்றில் கல் இருந்ததாகவும், அதன்பின் கல்லீரலில் கல் பரவியதாகவும் கூறியுள்ளனர். அதன்பின் அது கல்லீரல் புற்றுநோய் என்பது தெரியவந்தது. பல மருத்துவமனைகளிலும் அவருக்கு சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: இதுக்கு பேரு புரமோஷனா?!.. பச்சோந்தி வேஷம் போடாதீங்க!.. சந்தானத்தை பொளக்கும் பிரபலம்..

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துவிட்டார். இலங்கையிலிருந்து அவரின் உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணை புரத்துக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கனவே அங்கு இருக்கும் இளையராஜாவின் அம்மா மற்றும் மனைவியின் நினைவிடத்திற்கு நடுவே பவதாரிணியின் உடல் புதைக்கப்பட்டது.

இறுதி அஞ்சலியில் பவதாரிணி பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடல் வெங்கட்பிரபு உள்ளிட்ட சில குடும்பத்தினர் பாடியது அங்கிருந்த பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது. அவர் பாடிய பாடல் மூலமே அவருக்கு பிரியா விடைகொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளையராஜா அந்த இடத்துல வாத்தியாரு மாதிரி… மகன் -மகள்னுலாம் பார்க்க மாட்டாரு…

 

Related Articles

Next Story