More
Categories: Cinema News latest news

6 மாசமா அவஸ்த்தைப் படுறான்.. ஒண்ணும் வர மாட்டேங்குது.. இசையமைப்பாளர்களை கலாய்த்த இளையராஜா!

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு தலைக்கனம் எல்லாம் இல்லை. சிறு வயதில் நான் வாசிக்கும் இசையை பலரும் அப்படி ரசித்தார்கள். அதற்கு காரணம் யார் என அறிய முனைந்தேன். நான் வாசித்தது சினிமா பாட்டு, அந்த பாடலை இசையமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். அப்போ இந்த கைதட்டல்கள் எல்லாம் எனக்காக இல்லை என்றும் எம்.எஸ். விஸ்வநாதனுக்குத்தான் சேரும் என நினைத்தேன். அப்போதே என் தலைக்கனம் எல்லாம் பறந்து போய் விட்டது.

தீபாவளிக்கு 3 படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் என வந்து விடுவார்கள். 3 படத்துக்கும் நான் தான் பாடல்கள், பின்னணி இசை உள்ளிட்ட பணிகளை முடித்தாகவேண்டும் காலையில் இருந்து இரவு வரை 12 ரீல்களுக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறேன். 3 நாட்களில் 3 படங்களுக்கு பின்னணி இசையமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர் உலகிலேயே என்னைத் தவற யாரும் இல்லை. அதே போல 3 தீபாவளிக்கு தொடர்ந்து கொடுத்திருக்கிறேன் என்றும் கூறினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இந்த நடிப்பை ஊர் நம்பாதுடா.. செருப்பால் அடிக்கும் போட்டோவை போட்டு நடிகர்களை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை!

ஆனால், இப்போ வர இசையமைப்பாளர்கள் எல்லாம் ஒரு பாடலுக்கு இசையமைக்க 6 மாத காலம் வரை எடுத்துக் கொள்கின்றனர். மேலும், சிலர் ஒரு வருஷம் எடுத்துக் கொள்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதில், யாரு ரெக்கார்டு பண்ணுவது என்கிற போட்டி தனியாக நடக்கிறது. ஏன் அவ்ளோ நாள் எடுக்கிறாங்கன்னா அவங்களுக்கு வரல அதுதான் காரணம் என இளம் இசையமைப்பாளர்களை மட்டம் தட்டும் விதமாக கலாய்த்துப் பேசியுள்ளார் இளையராஜா.

அவரது பேச்சை கேட்ட ரசிகர்கள் இதுக்கு பேருத்தான் தலைக்கனம் இல்லாமல் பேசுறதா ராசா என கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாய்ப்பும் இல்ல.. வேலையும் இல்ல!. எல்லாம் போச்சி!.. வறுமையில் வாடும் பிஜிலி ரமேஷ்…

ஆனால், ராஜா சார் ரசிகர்கள் எல்லாம் அவர் சொல்வது 100க்கு 100 சதவீதம் உண்மை. சில இசையமைப்பாளர்கள் எல்லாம் இந்தியாவில் இசையமைத்தாலே இசை வராது என்றும் வெளிநாட்டில் தான் இசையமைக்கப் போகிறேன் என கிளம்பி விடும் கூத்தைத்தான் அவர் இப்படி சொல்லியிருக்கிறார் என சுட்டிக் காட்டி உள்ளனர்.

Published by
Saranya M

Recent Posts