ஊரே கொண்டாடும் கருடன்! உள்ளுக்குள்ள கதறும் சூரி.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா?

Actor Soori: தமிழ் சினிமா இப்போதுதான் சூடு பிடித்திருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களாக எந்த ஒரு பெரிய வசூலையும் பார்க்காத தமிழ் சினிமா அரண்மனை4 படத்திற்கு பிறகு அடுத்தடுத்து கல்லா கட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறது. அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியிலும் சரி வசூலிலும் சரி பெரிய சாதனையை படைத்திருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன். படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்த படம் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியன் 2 ல அப்படி ஒரு விஷயம் இருக்கா? அடுத்த மாசம் டெல்லியே களைகட்டப் போகுதா?

கோலிவுட்டில் எத்தனையோ இளம் நடிகர்கள் அடுத்தடுத்து படங்களை கொடுத்து விஜய் அஜித் சூர்யா இவர்களுக்கு பிறகு நாங்கள் தான் என்று போட்டி போட்டுக் கொண்டு வரும் நிலையில் சத்தமே இல்லாமல் அவர்களுக்கு அடுத்தது நான்தான் என தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் தனது கெத்தை காட்டி வருகிறார் சூரி.

விடுதலை படத்தில் ஒரு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்ததாக அவருக்கு வரிசையாக அவரது நடிப்பை தூக்கி காட்டும் அளவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதில் ஒன்றுதான் கருடன் திரைப்படம். இந்த கருடன் திரைப்படத்தில் சூரியின் நடிப்பை இன்றுவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த படம் வெளியாகி முதல் நாளில் 4.45 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாம் நாள் ஆறு கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இதையும் படிங்க: என்னது சிம்புவுக்கு ஜோடி அசினா? போட்டோ சூட்டெல்லாம் எடுத்து டிராப் ஆன படம்.. என்ன ரீசன் தெரியுமா?

படம் வெளியாகி மூன்று நாட்களில் ஒட்டுமொத்தமாக 18 கோடியாக வசூல் உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தால் சூரிக்கு ஒரு பிரச்சனையும் இருந்திருக்கிறது. இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு மதுரை அன்புச் செழியன் இடம் 20 கோடி வாங்கி இருந்தார்களாம் .ஆனால் எல்லா செலவையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 24.5 கோடியாக வந்து விட்டதாம்.

இதனால் ஒரு ஏழு கோடி அளவு படம் கடனில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஏழு கோடியை கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற சூழ்நிலையில் இருக்க சூரி தாமாக முன்வந்து அந்த ஏழு கோடிக்கு நான் பொறுப்பு என கையெழுத்திட்டு அதன் பிறகு தான் இந்த படமே ரிலீஸ் ஆனதாம். இதை பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயன் பாணியை பின்பற்றி வருகிறார் சூரி என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: குட்டி இடுப்பு செம கும்தவா இருக்கு!.. வேதிகாவை ஜூம் பண்ணி ரசிக்கும் ரசிகர்கள்!…

இப்படியே போனால் சிவகார்த்திகேயன் நிலைமை தான் சூரிக்கும் என்றும் அவருக்கு அறிவுரை சொல்லி வருகிறார்கள் .ஏனெனில் சிவகார்த்திகேயன் ஒரு கோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் அவரும் ஏகப்பட்ட கடனுக்கு சொந்தக்காரராக தான் இப்போது இருந்து வருகிறார். தயவு செய்து சூரி அந்த நிலைமைக்கு போக வேண்டாம் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இத்தனைக்கும் இந்த படத்தை தயாரித்தவர் சூரியின் மேனேஜர் தானாம். அதனால் அவருக்காக முன்வந்து சூரி இந்த உதவியை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it