தமிழ் சினிமாவிலேயே நான்தான் ஃபர்ஸ்ட்! சுந்தர் சி சொன்ன அந்த மேட்டர் என்ன தெரியுமா?

Sundar C: தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் கதைகளை படமாக எடுப்பதில் சிறந்த இயக்குனர் சுந்தர் சி. குறைந்த பட்ஜெட், குறைந்த நாட்கள் படப்பிடிப்பு, அதிகம் லாபம் என்பது தான் சுந்தர்சியின் பாலிசி. இவருடைய பெரும்பாலான படங்கள் இந்த வரிசையில் தான் வெளிவந்திருக்கின்றன. அதுவும் இவர் எடுத்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், முறைமாமன் போன்ற படங்கள் எல்லாமே காமெடிக்கு மிகவும் பேர் போன படங்கள். இன்று வரை மக்கள் மத்தியில் அந்த படங்களின் மேல் ஒரு வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. தற்போது சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் பெரிய லாபம் அடைந்திருக்கிறார்.

இதையும் படிங்க: பல்ப் வாங்குறது விஜயாவுக்கு ரொம்ப பழக்கமான விஷயம்… ஆனா அதுக்குனு இவ்வளோவா?

அது மட்டும் அல்லாமல் அரண்மனை படத்தின் முதல், இரண்டு ,மூன்று ஆகிய பாகங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் நான்காம் பாகமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு வேளை நான்காம் பாகம் வெற்றியடைந்தால் ஐந்தாம் பாகமும் எடுக்க ரெடி என கூறிய நிலையில் கூடிய சீக்கிரம் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது.

ஆனால் இப்போதைக்கு சுந்தர் சி கலகலப்பு 3 படத்தை இந்த மாதம் கடைசியில் ஆரம்பிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே கலகலப்பு 1, 2 போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக அதனுடைய மூன்றாம் பாகத்தை எடுக்க சுந்தர்சி தயாராக இருக்கிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவிலேயே ஒரு கோடி சம்பளம் பேசப்பட்ட முதல் இயக்குனர் நான்தான் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆண்ட்டின்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்!.. வி சேஃப் டிரெஸ்ஸில் அழகை காட்டும் கனிகா!…

அவருடைய உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களை எல்லாம் பார்த்த ஒரு தயாரிப்பாளர் அந்த காலத்தில் ஒரு கோடி கொடுத்து ஒரு படத்தில் இயக்குனராக ஒப்பந்தம் செய்தாராம். ஆனால் சில பல காரணங்களால் அந்த படத்தை நான் இயக்கவில்லை என சுந்தர்சி கூறி இருக்கிறார்.

 

Related Articles

Next Story